‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
பரத் நடித்த அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்ற படத்தை முதன்முதலாக இயக்கியவர் கேமராமேன் விஜய் மில்டன். அதையடுத்து பல ஆண்டுகளுக்குப்பிறகு கோலிசோடா படத்தை இயக்கினார். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனால் கவனிக்கப்படும் இயக்குனராகி விட்டார். அதையடுத்து ஏ.ஆர்.முருகதாஸின் நிறுவனத்துக்காக விக்ரமை வைத்து பத்து எண்றதுக்குள்ள படத்தை இயக்கியுள்ளார். மாஸ் ஹீரோவாக விக்ரம் அதிரடி நடிப்பை வெளிப்படுத்தியுள்ள இந்த படம் ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது. அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் இந்த படம் தீனிபோடும் என்று நம்பிக்கொண்டிருக்கிறார் விக்ரம்.
இதையடுத்து, அரிமா நம்பி படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கும் மர்ம மனிதன் படத்தில் நடிக்கிறார். ஆனால் அந்த படத்தை முடித்ததும் மீண்டும் விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கயிருப்பதாக ஒரு செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. ஆனால் இதுபற்றி விக்ரம் வட்டாரத்தை விசாரித்தபோது, இப்போதைக்கு பத்து எண்றதுக்குள்ள படத்தின் ரிசல்ட்டுக்காக அனைவருமே காத்திருக்கிறார்கள். ஜெமினி, சாமி பட வரிசையில் இந்த படமும் விறுவிறுப்பான கதையில் உருவாகியிருக்கிறது. மற்றபடி விஜய்மில்டன் இயக்கத்தில் மீண்டும் நடிப்பது பற்றி விக்ரம் இன்னும் முடிவெடுக்கவில்லை. அவர் விஜய்மில்டன் இயக்கத்தில் நடிப்பாரா? மாட்டாரா? என்பதை பத்து எண்றதுக்குள்ள படம் எந்த அளவுக்கு வெற்றி பெறுகிறது என்பதை பொறுத்தே முடிவு செய்வார் என்கிறார்கள்.