ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
சினிமாவில் ஜெயிப்பதற்கு போராடுபவர்களில் சிலர் தாங்கள் முன்பே ஜெயித்து விட்டால், போராடிக்கொண்டிருக்கும் தங்களது நண்பர்களுக்கு கைகொடுப்பார்கள். ஆனால் சிலர் திரும்பிப்பார்க்காமல் தங்கள் வெற்றியில் மட்டுமே கண்ணும் கருத்துமாக போய்க்கொண்டேயிருப்பார்கள். இந்த விசயத்தில், நடிகர் விமல் தன்னுடன் பழகிய நண்பர்களை ஒருபோதும் விட்டுக்கொடுப்பதில்லையாம். ஒரு நண்பனாக அவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை மறுக்காமல் செய்கிறாராம். அதேசமயம் தன்னிடம் கதை சொல்லி தன்னை வைத்து படம் இயக்க ஆசைப்படும் நண்பர்களைப்பார்த்தால் மட்டும் டென்சனாகி விடுகிறாராம் விமல்.
காரணம் கேட்டால், நாம ரெண்டு பேரும் ஒன்னா சரக்குகூட அடிக்கும் அளவுக்கு நண்பர்களாக இருக்கலாம். ஆனால் சினிமா என்று வருகிறபோது என்னை வைத்து என் நண்பன் படம் இயக்கினால், படப்பிடிப்பு தளத்தில் என்னை வாடா போடா என்றுதான் அழைப்பார். நெருங்கி பழகிய நண்பன் என்பதால் அதை தவிர்க்க முடியாது. ஆனால் நான் இன்றைக்கு அனைவருக்கும் தெரிந்த ஒரு ஹீரோ. ஆனால் என்னை மற்றவர்கள் முன்பு என் நண்பன் வா போ என்று சொன்னால் அது எனக்கு மரியாதையாக இருக்காது. இந்த ஒரு காரணத்திற்காகவே நண்பர்களுக்கு நான் என்னை இயக்கும் வாய்ப்பு கொடுப்பதில்லை என்று சொல்லும் விமல், இதன்காரணமாக நட்பு கெட்டுப்போவதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது என்கிறாராம். ஆக, நான் நண்பர்களுக்கு சான்ஸ் கொடுக்காததற்கு காரணம், அவர்களுடனான நட்பு கடைசிவரை நீடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகத்தான் என்கிறாராம் விமல்.