சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
பாலா படங்கள் என்றாலே அந்த படங்களில் நடக்கும் ஹீரோக்களை தாடி, பரட்டை தலை, அழுக்கு சட்டை என்று ஒரு மார்க்கமாக மாற்றி விடுவார். அந்த வகையில், சேதுவில் விக்ரமை மனநலம் பாதிக்கப்பட்டவராக காண்பித்தவர், பின்னர் பிதாமகனிலும் அவரை கிட்டத்தட்ட அதேபோன்றதொரு கெட்டப்பிலேயே காண்பித்தார். அதன்பிறகு நந்தாவில் சூர்யா, நான் கடவுளில் ஆர்யா, அவன் இவனில் ஆர்யா-விஷால், பரதேசியில் அதர்வா என்று ஒவ்வொரு ஹீரோக்களையுமே அவர்கள் கனவிலும் நினைத்துப்பார்த்திராத அளவுக்கு அவர்களின் கெட்டப்பை மாற்றி நடிக்க வைத்தார். குறிப்பாக, எல்லோரையுமே அழுக்குப்பையன்களாக, கரை படிந்த பற்களை உடையவர்களாகவே காண்பித்தார்.
அந்த வகையில், தாரைத்தப்பட்டையில் நடித்துள்ள சசிகுமாரையும் அவர் விட்டு வைக்கவில்லை. இந்த படத்தில் சசிகுமார் கரகாட்டக்காரராக நடித்திருந்தபோதிலும், அழுக்கு லுங்கி, அழுக்கு சட்டை என எண்ணெயே பார்த்திராத பரட்டை தலை கெட்டப்பில் நடித்துள்ள புகைப்படங்கள் தற்போது வெளியாகியிருக்கிறது. அதோடு அவர் நடந்து வரும் சாயல் பிதாமகன் விக்ரமை நினைவு படுத்துகிறது. ஆக, தாரைத்தப்பட்டை சசிகுமார், வழக்கம்போல் பாலா படங்களின் ஹீரோக்களுக்கு எந்தவித மாற்றமும் இல்லாமல் அதே அழுக்கு படிந்த கெட்டப்பிலேயே நடித்திருப்பதை இந்த புகைப்படம் உறுதிபடுத்துகிறது.