ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய்யின் நேரடி தலையீட்டால் புலி பட பிரச்னை தீர்ந்துள்ளது, இதனால் இன்று காலை 10.30 மணி முதல் படம் ரிலீசானது. கத்தி படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் பிரமாண்டமாக படமாக உருவாகியுள்ள படம் புலி. சிம்புத்தேவன் இயக்கத்தில் பேண்டஸி படமாக உருவாகியுள்ள இப்படத்தில் விஜய்யுடன் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் இன்று ரிலீஸாகிறது. ஆனால் நேற்று திடீரென புலி படம் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள், நடிகர் விஜய், ஆகியோரது வீடுகளில் வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். விடிந்தால் புலி படம் வெளியாக வேண்டிய சூழ்நிலையில் நேற்று நடைபெற்ற சோதனையால் ஃபைனான்ஸ் பிரச்சனைகள் முழுவதுமாகத் தீர்க்கப்படாமல் புலி படத்தின் வெளியீட்டில் பிரச்சனை ஏற்பட்டது.
ஃபைனான்சியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி படத்தை வெளியிட நேற்று இரவு ஆரம்பமான பேச்சு வார்த்தை நள்ளிரவு வரை தொடர்ந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் முடிவு எட்டப்படாமல் இருந்தது. இதனால் புலி படத்தின் காலை மற்றும் சிறப்பு காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதனால் ரசிகர்கள் சில இடங்களில் வன்முறைகளில் ஈடுபட்டனர். சில ஊர்களில் தியேட்டர்களில் கல் வீச்சு சம்பவமும் நடைபெற்றது.
விஜய் நேரடி தலையீடு
இந்நிலையில், புலி படத்தை எப்படியாவது ரிலீஸ் செய்ய வேண்டும் என்று விஜய்யே நேரடியாக களத்தில் இறங்கினார். சென்னை பிரசாத் லேப்பில் விஜய் தலைமையில் புலி படம் பிரச்னை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் டி.ராஜேந்தர், முக்கிய விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் உள்ளிட்ட சிலர் பங்கேற்றனர். கூட்டத்தில் புலி படம் தொடர்பான நிதி சிக்கலுக்கு விஜய்யே நேரடியாக தலையீட்டு நிதி பிரச்னைக்கு தான் பொறுப்பேற்தாக கூறப்படுகிறது. இதனால் புலி படத்திற்கு எழுந்த பிரச்னைகள் எல்லாம் சுமூகமாக தீர்வாகியுள்ளது. இதனையடுத்து காலை 10.30 மணி முதல் புலி படம் அனைத்து திரையரங்குகளிலும் ரிலீஸானது. விஜய்யே நேரடியாக தலையிட்டதால் புலி படம் பிரச்னை தீர்ந்துள்ளது.
ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்
இதனிடையே புலி படத்தின் காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டதால் பல இடங்களில் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்ட செய்தி விஜய் காதுகளுக்கு எட்டியுள்ளது. ரசிகர்கள் அனைவரும் அமைதியாக இருக்கும்படி, படம் நண்பகல் முதல் ரிலீஸாகும் என விஜய் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்கா - கனடாவிலும் ரிலீஸானது
இதேப்போன்று அமெரிக்காவிலும் புலி படத்தின் சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது அங்கும் படம் ரிலீஸாகியுள்ளது. ரசிகர்கள் சுமார் 5 மணிநேரம் காத்திருந்து புலி படத்தை பார்த்து வருகின்றனர்.