ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் முன்னணி இயக்குநராக திகழ்கிறார் பிரபுதேவா. தற்போது அக்ஷ்ய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள சிங் இஸ் பிலிங் படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் அக்டோபர் 2ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரபுதேவாவிடம், எப்போது ஷாரூக்கான் மற்றும் அமீர்கான் படங்களை இயக்க போகிறீர்கள் என்று கேட்டபோது... அதற்கு பதிலளித்த பிரபுதேவா... யாருக்கு தான் அந்த ஆசை இருக்காது. ஷாரூக், அமீர்கானை இயக்க எனக்கும் ஆசை தான். இருவரும் சூப்பர்ஸ்டார் நடிகர்கள், அதற்கான கதைக்களம் அமைய வேண்டும். அவர்களை எப்போது இயக்க போகிறேன், அது எவ்வாறு நிகழ போகிறது என்று தெரியவில்லை என கூறினார்.