ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகை குஷ்பு நேற்று தனது 45வது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்தநாளையட்டி அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: 1986ம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு வந்தேன். அன்றுமுதல் தமிழக மக்களின் அளவிடமுடியாத அன்பு எனக்கு கிடைத்து வருகிறது. தமிழ் மக்கள் என்னை மகளாக, மருமகளாக சகோதரியாக பார்த்து வருகிறார்கள். ஒரு காலத்தில் கனவு கன்னியாக பார்த்த ரசிகர்கள், இப்போது என்னை அன்பான அண்ணியாக பார்க்கிறார்கள். இதை நினைக்கும்போது எனக்கு பூரிப்பாக இருக்கிறது. நன்றியை விட இதைப்பற்றிச் சொல்ல எனக்கு வேறு வார்த்தைகள் இல்லை.
நடிகை, தயாரிப்பாளர், இயக்குனரின் மனைவி என்ற முறையில் நான் சினிமாவை இப்போது வெளியில் இருந்து பார்த்து வருகிறேன். நடிகர் சங்க தேர்தலில் யாருக்கு ஓட்டளிப்பேன் என்று சொல்ல மாட்டேன். ஆனால் என்னுடைய ஆதரவு விஷால் அணியினருக்குத்தான். புதியவர்கள் பொறுப்புக்கு வரவேண்டும். எனக்கு பிடித்த நல்ல கேரக்டர்கள் அமைந்தால் நடிப்பதில் தயக்கம் இல்லை என்றார் குஷ்பு.