வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
விதார்த், சமுத்திரகனி நடித்த படம் காடு. இந்த படத்தில் நாயகியாக அறிமுகமானவர் சமஸ்கிருதி. கேரளத்து நடிகையான இவர் ஐந்து அடிக்கும் குறைவாக இவர் இருந்தபோதும் அவரது குடும்ப பாங்கான முகத்துக்காகவே காடு படத்திற்கு இவரை புக் பண்ணியதாக சொன்னார்கள். அந்த படத்திலும் இயல்பாக நடித்திருந்தார் சமஸ்கிருதி. அதனால் அவருக்கு அடுத்தபடியாக தமிழில் பல படங்கள் கமிட்டாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது சமஸ்கிருதியின் கைவசம் இருப்பது வில் அம்பு படம் மட்டுமே. டைரக்டர் சுசீந்திரன் தயாரித்துள்ள இப்படத்தை ரமேஷ்சுப்ரமணியம் இயக்கியிருக்கிறார். வழக்கு எண் ஸ்ரீ, பொறியாளன் ஹாரிஸ் கல்யாண் ஆகியோர் நாயகர்களாக நடித்துள்ள இந்த படத்தில் இன்னொரு நாயகியாக சிருஷ்டி டாங்கேயும் இருக்கிறார்.
அதோடு சமஸ்கிருதியின் நடிப்பு மற்றும் தோற்றம் தேவயானியின் சாயலில் இருப்பதாக பலரும் கருத்து சொன்னதோடு, தேவயானி இடத்தை பிடிக்குமாறும் அறிவுறுத்தினார்களாம். ஆனால் அது அத்தனை எளிதான விசயமல்ல என்றாலும், தேவயானியைப் போன்று நடிப்பதற்கு முயற்சி எடுக்கப்போவதாக கூறி வரும் சமஸ்கிருதி, காடு, வில் அம்பு படங்களில் ஹோம்லியாக நடித்திருந்தபோதும், கதைக்கு அவசியப்பட்டால் தேவையான கிளாமர் காட்டி நடிக்கவும் தயாராக இருப்பதாக கூறுகிறார். மேலும், தனது மிதமான கிளாமர் ஆல்பம் ஒன்றையும் கோலிவுட்டில் சுற்றலில் விட்டிருக்கிறார் சமஸ்கிருதி.