தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் விஜய் வீடு மற்றும் புலி படத்தின் தயாரிப்பாளர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடப்பதாக கடந்த சில நாட்களாகவே திரையுலகில் தகவல் அடிபட்டுக்கொண்டிருந்தது. பின்னர் அது வதந்தி என்ற தெரிய வந்தது. இந்நிலையில் இன்றும் அதேபோன்ற தகவல வெளியானது. ஆனால் இம்முறை வதந்தி அல்ல, உண்மை.
நடிகர் விஜய் வீடு மற்றும் புலி படத்தின் தயாரிப்பாளர்கள் அலுவலகம் மற்றும் வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர். நடிகர் விஜய் மற்றும் புலி படத்தின் தயாரிப்பாளர்கள் வீடு, அலுவலகங்களில் மட்டுமின்றி, புலி படத்துக்கு பல கோடிகளை பைனான்ஸ் செய்திருப்பதாக சொல்லப்படும் மதுரை பைனான்சியர் அன்புவின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்களாம்.
நடிகர் விஜய், மதுரை அன்பு தவிர கபாலி படத்தை தயாரித்து வரும் கலைப்புலி தாணுவும் ஐ.டிரெய்டில் சிக்கி இருக்கிறார். அவரது அலுவலகம் வீட்டில் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது. இவர்கள் தவிர, நடிகை நயன்தாரா, நடிகை சமந்தாவின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை மதுரை ஐதராபாத், கொச்சியில் 32 இடங்களில் நடைபெற்று வரும் வருமான வரித்துறையினரின் சோதனையில் கணக்கில் வராத பல கோடி கருப்புப்பணம் சிக்கியிருப்பதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
அஜித் நடித்த ஆரம்பம் படம் வெளியாவதற்கு முந்தைய நாள் அப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் வீட்டை முற்றுகையிட்டது வருமானவரித்துறை.
அதேபோல் தற்போது புலி படம் நாளை வெளி வர உள்ள நிலையில் விஜய் உட்பட புலி தயாரிப்பாளர்கள் சோதனைக்குள்ளாகி இருக்கிறார்கள்.