டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஐந்து வருடங்களுக்கு முன் வெளியான 'பாடிகார்டு' படத்திற்குப்பின் மலையாளத்தில் நடிப்பதில் மிகப்பெரிய இடைவெளி விட்டிருந்தார் நயன்தாரா. அதன்பின் என்ன நினைத்தாரோ தெரியவில்லை தனது தாய்மொழியான மலையாளத்தில் இரண்டு வருடத்திற்கு ஒரு படம் நடிக்கலாம் என புது கொள்கையை உருவாக்கி கொண்டார் நயன்தாரா. அதுவும் கூட இந்த வருடத்தில் போனால் போகிறதென்று அவராக உருவாக்கி கொண்டதுதான். அந்தவகையில் மம்முட்டியுடன் 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தில் நடித்தவருக்கு மலையாள ரசிகர்கள் அமோக வரவேற்பு தந்தனர்..
இந்த வரவேற்பை எதிர்பாராத நயன்தாராவுக்கு, நடிக்க வந்த இந்த 12 வருடங்களில் பெரும்பாலும் தெலுங்கு, தமிழ் திரையுலகிலேயே அமர்ந்துகொண்டு, தனது சொந்த மண்ணான மலையாள ரசிகர்களை புறக்கணித்து விட்டோமே என ஒரு குற்ற உணர்வு தோன்றியது. இனி என்ன பிடிவாதம் என அப்போதே மெல்ட் ஆன நயன்தாரா, ஜீத்து ஜோசப் தான் இயக்கிய 'லைப் ஆப் ஜோஸுட்டி' படத்தில் நடிக்க அழைத்தபோது மறுக்காமல் ஒப்புக்கொண்டார். அடுத்ததாக ஏ.கே.சாஜன் இயக்கத்தில் மம்முட்டியுடன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வர அதையும் ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார். அதனால் இனி வரும் வருடங்களில் மலையாள ரசிகர்களுக்கு நயன்தாராவின் தரிசனம் தொடர்ந்து கிடைக்கும் என்பது உறுதி.