தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நாளை மறுதினம் வெளியாகவிருக்கும் 'புலி' படம் வழக்கம்போல கேரளாவில் வெளியாவதில் எந்தவித தனிப்பட்ட சிக்கலும் இல்லை. ஆனால் அவர்கள் கேட்கும் 200 தியேட்டர்களை ஒதுக்க மாட்டோம் என்றுதான் கேரள சினிமா எக்சிபிட்டர்ஸ் சங்க தலைவர் லிபர்ட்டி பஷீர் எதிர்ப்புக்கொடி பிடிக்கிறார். இந்த விவகாரத்தால் தியேட்டர் ஓனர்கள், பட தயாரிப்பாளர்கள், வெளியீட்டாளர்கள் ஆகியோருக்குள் அடிக்கடி பிரச்சனை வெடித்து, சமீபத்தில் தியேட்டர்கள் ஸ்ட்ரைக் வரை எல்லாம் போனது. ஆரம்பத்தில் சின்ன பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் கிடைக்காததால் தான் அவர் இப்படி எதிர்ப்பு காட்டுகிறார் என நினைத்தால், அவரோ தியேட்டர்களுக்கு வரும் லாபம் பிரிந்துபோவதை தடுக்கத்தான் இந்த அதிரடியை கையில் எடுத்துள்ளாராம்.
ஆனால் கேரள அரசின் திரைப்பட வளர்ச்சி கழகத்தின் தலைவரான ராஜ்மோகன் உன்னித்தான், எத்தனை தியேட்டர்கள் என்றாலும் 'புலி' படத்தை திரையிடலாம், இதில் சினிமா சங்கம் என்கிற பெயரில் யாரும் படங்களை திரையிட தடை விதிக்க முடியாது, விதிகவும் கூடாது என கூறியுள்ளார். இனி இதுபோல எதிர்காலத்தில் நடக்காத வண்ணம், நடவடிக்கைகள் எடுக்குமாறு கேரள அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார் ராஜ்மோகன் உன்னித்தான். ஆக இந்த இரண்டு தரப்பு மோதல்களில் 'புலி'க்கு சாதகமான சூழல் ஏற்பட்டு 200 தியேட்டர்களில் வெளியாகுமா என்பது விரைவில் தெரியும்.