ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பல்வேறு சர்வதே விருதுகளையும், தேசிய விருதையும் பெற்ற குற்றம் கடிதல் சென்ற வாரம் வெளிவந்தது. மீடியாக்களின் பாராட்டுதலோடு ஓரளவுக்கு நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நல்ல குவாலிட்டியுடன்கூட சிடியும் திருட்டுத்தனமாக விற்பனைக்கு வந்து விட்டது. இதை தடுக்க தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. சதீஷ்குமார் தனது சொந்த பொறுப்பில் தனிப்படை ஒன்றை அமைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குற்றம் கடிதல் எனக்கு மட்டுமல்ல , இந்தப் படத்தில் சம்மந்தப்பட்ட அனைவருக்கும் மிக பெரிய கவுரவம் கொடுக்கும் படமாகும். உலகெங்கும் இருந்து புகழாரங்கள் வந்த வண்ணம் இருக்கிறது.முற்றிலும் புதியவர்கள கொண்ட இந்த படக் குழுவினர் , நடிப்பிலும் சரி தொழில் நுட்பத்திலும் சரி இப்படி ஒரு மாற்றத்தை நிகழ்த்தி இருப்பது மிகப் பெரிய சாதனை என்பேன். இந்த நேரத்தில் படத்தின் ஓட்டத்தை முறியடிக்க பைரசி மூலம் படம் பார்க்கும் படலம் ஆரம்பித்து இருக்கிறது. இதை தடுக்க எங்களது தயாரிப்பு குழுவினரின் சார்பில் ஒரு படை அமைத்திருக்கிறேன். இதையும் மீறி இத்தகைய செயலில் ஈடுப்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.