‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தமிழ்த் திரையுலகத்தில் கவிஞர்கள் வரிசையில் கண்ணதாசன், வாலி ஆகியோருக்குப் பிறகு தன்னுடைய பாடல்களால் இன்று வரை பேசப்பட்டுக் கொண்டிருக்கும் கவிஞர்களில் வைரமுத்து முக்கியமானவர். இளையராஜாவுன் இணைந்து எத்தனையோ சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்தவர், அவரை விட்டுப் பிரிந்த பின் ஏ.ஆர்.ரகுமானுடன் தன் கூட்டணியை வைத்துக் கொண்டார். அந்தக் கூட்டணியும் பல ஹிட் பாடல்களைக் கொடுத்தது. அதே சமயம் மேலும் பல இசையமைப்பாளர்களுடன் பல ஹிட் பாடல்களைக் கொடுத்து வருகிறார் வைரமுத்து.
இருந்தாலும் வைரமுத்துவின் மகனான மதன் கார்க்கியும் பாடல்கள் எழுத ஆரம்பித்த பிறகு வைரமுத்து எழுத வேண்டிய சில பாடல்கள் அவரது மகனான மதன் கார்க்கியைத் தேடிப் போக ஆரம்பித்தன. மதன் கார்க்கியும் தற்போது பல ஹிட் பாடல்களுக்குக் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார். அதோடு 'பாகுபலி' படத்தின் மூலம் வசனகர்த்தாவாகவும் புகழ் பெற்று விட்டார்.
பல முன்னணி இயக்குனர்களும் வைரமுத்துவுடன் மதன் கார்க்கியையும் பாடல் எழுத வைக்கின்றனர். சிலர் வைரமுத்துவுக்குப் பதிலாக மதன் கார்க்கியை மட்டும் பாடல் எழுத வைக்கின்றனர். ஷங்கருடன் ஏற்கெனவே 'எந்திரன், நண்பன், ஐ' ஆகிய படங்களில் பாடல்களை எழுதிய மதன் கார்க்கி தற்போது 'எந்திரன் 2' படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு படத்தின் வசனத்தையும் அவர்தான் எழுதப் போகிறாராம்.
ஷங்கர் இயக்கிய 'ஐ' படத்தில் வைரமுத்து எந்தப் பாடலையும் எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது 'எந்திரன் 2' படத்திலும் வைரமுத்து பாடல்களை எழுதாமல் போனால் அது ஆச்சரியமான தகவல்தான். இதன்மூலம் அப்பாவின் இடத்தை மதன் கார்க்கி நிரப்புகிறார் என்று எண்ண தோன்றுகிறது.