டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பிரபல நடிகர் நடிகைகள் பாடும் பாடல்கள் எளிதில் ஹிட்டாகி வருவதால் தற்போது மார்க்கெட்டில் இருக்கும் டி.இமான், அனிருத், தேவிஸ்ரீ பிரசாத் உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் நடிகர் நடிகைகளை பாட வைப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர்களில் இசையமைப்பாளர் அனிருத் விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன், ஸ்ருதிஹாசன், ஆன்ட்ரியா என பலரை தனது இசையில் பாட வைத்திருக்கிறார்.
அந்த வரிசையில், தான் இசையமைத்த 3 மற்றும் மான்கராத்தே ஆகிய படங்களில் ஸ்ருதிஹாசனை பின்னணி பாடி வைத்திருக்கிறார் அனிருத். இதில், 3 படத்துக்காக ஸ்ருதி பாடிய கண்ணழகா காலழகா, மான்கராத்தேயில் பாடிய உன் விழிகளில் என்ற இரண்டு பாடல்களுமே அந்த படங்கள் வெளியான நேரத்தில் இளசுகளின் பேவரிட் சாங்காக முணுமுணுக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், தற்போது அஜீத்தின் வேதாளம் படத்துக்காகவும் அனிருத் இசையில் ஒரு டூயட் பாடலை பாடுகிறார் ஸ்ருதிஹாசன். இந்த பாடலை ட்ராக் சிங்கர் பாடியதை வைத்தே படமாக்கி விட்டார்களாம். அதனால் அடுத்தபடியாக ஆடியோ ரிலீசுக்கு முன்பு ஸ்ருதியை பாட வைக்கிறாராம் அனிருத்.
மேலும், இந்த வேதாளம் படம் தவிர, விஜய்யுடன் நடித்துள்ள புலி படத்திலும் தேவிஸ்ரீ பிரசாத் இசையில் ஏன்டி ஏன்டி -என்று தொடங்கும் வைரமுத்துவின் பாடலை விஜய்யுடன் இணைந்து ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.