Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எம்.எஸ்.விஸ்வநாதன் ஒரு குழந்தை மாதிரி! -இசையமைப்பாளர் ஈ.எஸ்.ராம்

29 செப், 2015 - 11:04 IST
எழுத்தின் அளவு:
MSV-like-child-says-Musicdirector-ES-Ram

கோழிக்கூவுது படத்தில் இசையமைப்பாளரானவர் ராம். அதையடுத்து வீரத்திருவிழா, ஒரு கனவு போல போன்ற படங்களுக்கு இசையமைத்து வருபவர், அடுத்து எழில் இயக்கும் ஒரு படத்திற்கும் இசையமைக்கிறார். மேலும், தனது முதல் படத்திலேயே மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதனை பாட வைத்த ஈ.எஸ்.ராம், அதை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது என்று பெருமையாக சொல்கிறார்.


மேலும் அவர் கூறுகையில், நான் இசையமைக்கும் படங்களில் 5 பாடல்கள் என்றால் அதில் கண்டிப்பாக ரெண்டு மெலோடி பாடல்களை கொடுத்து விட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். காரணம், மெலோடி பாடல்களுக்குத்தான் லைப் அதிகம். கானா பாடல்கள் எவ்வளவு வேகமாக ஹிட்டாகிறதோ அவ்வளவு வேகமாக காணாமல் போய்விடும். மேலும், எனது இசையை எடுத்துக்கொண்டால் எனது முதல் படத்தில் ஹிட்டான இரண்டு பாடல்களுமே மெலோடிதான். அந்த வகையில், இன்றைய ரசிகர்கள் குத்துப்பாடல்களுக்கு மாறிவிட்டார்கள். ரசனை மாறி விட்டது என்று சொன்னாலும், என்னைக்கேட்டால் இப்போதைய ரசிகர்களும் மெலோடி இசையைத்தான் அதிகமாக ரசிக்கிறார்கள் என்றே சொல்வேன். அதற்கு ஹிட்டாகி வரும் பாடல்களே சாட்சி என்கிறார்.


மேலும், நான் ஏ.ஆர்.ரகுமானின் தீவிரமான ரசிகன் என்றாலும் எம்.எஸ்.வி., இளையராஜாவின் பாடல்களை சிறுவயதில் இருந்தே ரசித்து வந்தவன். அவர்கள் இருவரது இசையின் பாதிப்பு இல்லாத இசையமைப்பாளர்கள் இருக்க முடியாது. குறிப்பாக, எம்எஸ்வி சார் காலத்தில் டெக்னாலஜியே இல்லை. ஆனால் பின்னர் டெக்னாலஜி வந்து விட்டது. அதனால் அவர் காலத்தில் இசையமைப்பதுதான் கஷ்டமான விசயம். ஆனபோதும் அவர் காலத்து பாடல்கள் இன்றைக்கும் பெருவாரியான மக்கள் மத்தியில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு ஜீவனுள்ள பாடல்களை கொடுத்தார்.


அப்படிப்பட்ட மெல்லிசை மன்னர் எம்எஸ்வியை எனது இசையில் பாட வைத்தது நான் செய்த புண்ணியம் என்றுதான் சொல்வேன். ஏ.ஆர்.ரகுமான் இசையில் சங்கமம், கன்னத்தில் முத்தமிட்டால் படங்களுக்கு பாடிய பிறகு அவர் பல ஆண்டுகளாக பின்னணி பாடவில்லை. நான் இசையமைத்த கோழிக்கூவுது படத்துக்குதான் பாட அழைத்தோம். நான் எந்த இசையமைப்பாளரிடமும் வேலை செய்ததில்லை. இசையில் எம்ப்பில் முடித்திருக்கிறேன். அதனால் எம்எஸ்வி பாடுவாரோ மாட்டாரோ என்று பயந்தேன். ஆனால் பாடலின் பல்லவியை கேட்ட அவர், பாட சம்மதித்தார். முன்னதாக அவரை பாட வைக்க முடிவெடுத்தபோது எம்எஸ்.விஸ்வநாதன் ரொம்ப டென்சன் பார்ட்டி. அவரை குழந்தை மாதிரி வேலை வாங்க வேண்டும் என்று பயமுறுத்தினார்கள்.


அதனால் அவர் ரெக்கார்டிங் தியேட்டருக்கு வரும்போது பயந்து கொண்டேயிருந்தேன். ஆனால் ஒருதடவை ட்ராக்கை கேட்டவர், எல்லாரும் ஒத்த சானு வயித்தோடதான் பொறந்தோம் என்ற அந்த பாடலை ஒரு மணி நேரத்தில் பாடிக்கொடுத்தார். அதுமட்டுமின்றி, தம்பி உங்களுக்கு திருப்தியா இருக்கா என்று என்னிடம் திரும்பத்திரும்ப கேட்டார். அந்த அளவுக்கு தான் பாடியது இசையமைப்பாளருக்கு திருப்தியாக இருக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அதோடு பாட வரும்போதே ஒரு குழந்தை மாதிரி சிரித்துக்கொண்டேயிருந்தார். எனக்கு நடப்பது நனவா கனவா என்றே புரியவில்லை. அந்த வகையில் ஒரு மிகப்பெரிய இசைமேதை எனது முதல் படத்தில் அதுவும் முதல் பாடலை பாடினார் என்பதை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது என்கிறார் இசையமைப்பாளர் ஈ.எஸ்.ராம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in