'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழில் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருப்பவர் ஸ்ருதிஹாசன். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். விஜய் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ள 'புலி' படம் நாளை மறுநாள் வெளியாக உள்ளது. அஜித் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ள 'வேதாளம்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. சூர்யாவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ள 'சிங்கம் 3' படம் அடுத்த மாதம் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க உள்ள புதிய படத்திலும் அவர் ஜோடியாக ஸ்ருதிஹாசன்தான் நடிக்கிறார்.
தொடர்ந்து சரியான இடைவெளிகளில் தமிழ்ப் படங்களை ஒப்புக் கொண்டு நடித்து வரும் ஸ்ருதிஹாசன், அவருடைய சம்பளத்தை உயர்த்திவிட்டார் என டோலிவுட்டில் ஒரு செய்தி பரவியுள்ளது. மலையாளத்தில் வெற்றி பெற்ற 'பிரேமம்' படத்தை தெலுங்கில் நாகசைதன்யா நடிக்க ரீமேக் செய்ய உள்ளார்கள். இந்தப் படத்தில் நாயகியாக நடிப்பதற்காக ஸ்ருதிஹாசனை அணுகிய போது அவர் 2 கோடி ரூபாய் சம்பளமாகக் கேட்டாராம். ஆனால், ஸ்ருதி அதை கடுமையாக மறுத்துள்ளார். 'ஸ்ரீமந்துடு' படத்தின் வெற்றிக்குப் பிறகு ஸ்ருதியைத் தேடி பல தெலுங்கு வாய்ப்புகள் வருகிறதாம். இருந்தாலும் அவர் இன்னும் எந்த வாய்ப்புகளையும் ஏற்கவில்லை என்கிறார்கள்.
தற்போதைக்கு தமிழில் புதிதாக இரண்டு பட வாய்ப்புகளையும், ஹிந்தியில் இரண்டு படங்களையும் கைவசம் வைத்திருக்கும் ஸ்ருதிஹாசன் தமிழில் 'புலி, வேதாளம்' ஆகிய படங்கள் வெளிவந்த பிறகு அவருடைய சம்பளத்தை உயர்த்த வாய்ப்புள்ளதாக கோலிவுட்டில் சொல்கிறார்கள்.