தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அதிக பெண் ரசிகைகளை கொண்டவரான பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு இப்போது ஒரு பெண் ரசிகையினாலேயே சிக்கல் வந்துள்ளது.. பொதுவாக சல்மான்கானை விழா நிகழ்ச்சிகளிலோ அல்லது படப்பிடிப்பு தளங்களிலோ பார்க்கும் ரசிகைகள் அவருடன் இணைந்து செல்பி எடுத்துக்கொள்வதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். ஆட்டோ கிராப் காலம் தான் மலைஏறிவிட்டதே..! அப்படி ஒரு ரசிகை, சல்மான் நடித்துக்கொண்டு இருக்கும் 'பிரேம் ரதன் தன் பாயோ' என்கிற படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு மற்றவர்களைப்போல சல்மான்கானை பார்ப்பதற்காக வந்தார்.
வந்தவர் சல்மான்கானுடன் செல்பி எடுத்துக்கொண்டு சந்தோஷத்துடன் கிளம்பினார். ஆனால் சில நாட்கள் கழித்து தனது முகநூல் பக்கத்தில் அந்த போட்டோவை பதிவிட்ட அந்தப்பெண், சல்மான்கானின் தற்போதைய கேர்ள் பிரண்ட் நான் தான் என அதில் குறிப்பிட்டிருந்தார். இந்த விஷயம் எப்படியோ பரவி சல்மான்கானின் மேனேஜரான ரேஷ்மா ஷெட்டியின் கவனத்துக்கு போக, உடனே அந்த பெண்ணை தொடர்பு கொண்டு இதுபோல பண்ணுவதெல்லாம் தவறு என எச்சரித்து அனுப்பியுள்ளார். அதுமட்டுமல்ல, இந்த விஷயத்தை சல்மான்கானின் காதுகளுக்கும் கொண்டு செல்ல, உஷாரான சல்மான்கான் இப்போதெல்லாம் ரசிகைகள் யாராவது செல்பி எடுக்கவேண்டும் என்றால் ஆளைவிடுங்க சாமி என எஸ்கேப் ஆகிவிடுகிறார்.