'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிருத்விராஜ் நடித்து கடந்த ஒரு வாரத்துக்கு முன் வெளியான 'என்னு நிண்டே மொய்தீன்' படத்திற்கு ஒரு வாரம் கழிந்தபின்னரும் கூட நேற்றைய தினம் பல இடங்களில் ஹவுஸ்புல் போர்டு தொங்கவிடப்பட்டது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமான நிகழ்வு.. நல்ல படம் என மவுத் டாக் மூலமாக செய்தி பரவியதால் ரசிகர்கள், குறிப்பாக இஸ்லாமிய மக்கள் இந்தப்படத்தை பார்க்க ஆர்வமுடன் வருகின்றனர்.
கேரளாவில் உள்ள பெரும்பாவூர் நகரத்தில் உள்ள ஈ.வி.எம் தியேட்டர் வளாகத்தில் உள்ள ஸ்டுடியோ-1 திரையரங்கில் தான் என்னு நிண்டே மொய்தீன்' படம் திரையிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 600 இருக்கைகள் கொண்ட இந்த தியேட்டரில் படம் பார்க்க நீண்ட நேரம் க்யூவில் நின்றிருந்த ரசிகர்கள் பலர் தங்களுக்கு டிக்கெட் கிடைக்காததால் ஆத்திரத்தில் வன்முறையில் ஈடுபட முயற்சித்தனர். பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் ஒரு வழியாக கூட்டத்தை சமாளித்தனர்..
டிக்கெட் கிடைக்காதவர்களுக்கு உடனே அதே ஈ.வி.எம் தியேட்டரில் உள்ள இன்னொரு அரங்கில் இதே படத்தை திரையிடலாம் என்று முயற்சி செய்தபோது, அங்கே 'லைப் ஆப் ஜோஸுட்டி', 'கோஹினூர்', 'உறும்புகள் உறங்காரில்லா' ஆகிய படங்களுக்கு கணிசமான ஆடியன்ஸ் இருந்ததால் அதுவும் முடியால் போனது. இந்த தியேட்டரில் ரிசர்வேஷன் வசதி உள்ளதால் பலரும் முன்கூட்டியே ரிசர்வ் செய்துவிட்டு வந்தனர். இதனை அறியாமல் க்யூவில் டிக்கெட் எடுக்க நின்றிருந்தவர்கள், ரிசர்வ் செய்தவர்கள் எல்லாம் லேட்டாக வந்தால் கூட டிக்கெட் வாங்கி செல்வதை பார்த்து, அந்த ஆத்திரத்தில் தான் ரகளையில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.