தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரைத்தப்பட்டை என சினிமாவுக்கு வந்து 16 வருடங்களில் 7 படங்களை மட்டுமே இயக்கியிருக்கிறார் டைரக்டர் பாலா. எண்ணிக்கையில் குறைவான படங்களே என்றாலும், அவரது ஒவ்வொரு படங்களுமே பேசப்பட்டவை. அந்த வகையில், தரமான படைப்புகளை கொடுக்க வேண்டும் என்பதற்காக அதிக காலஅவகாசம் எடுத்துக்கொள்கிறார் பாலா.
அதோடு, மாயாவி, பிசாசு, சண்டிவீரன் போன்ற படங்களை தனது பி ஸ்டுடியோ சார்பில் தயாரித்தும் இருக்கிறார். இந்த நிலையில், ஆர்யாவை வைத்து அவர் இயக்கிய நான் கடவுள் படத்தின் 2ம் பாகத்தை எடுக்கயிருப்பதாக முன்பே செய்திகள் வெளியாகின. ஆனால், பின்னர் அதுபற்றிய தகவல்களே இல்லை.
இந்த நிலையில், இதுகுறித்து சமீபத்தில் டைரக்டர் பாலாவிடம் கேட்டபோது, நான் கடவுள் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க நான் எப்போதுமே தயாராகத்தான் உள்ளேன். ஆனால் முதல் பாகத்தில் நடித்த ஆர்யா இரண்டாம் பாகத்திலும் நடிக்க வேண்டுமே. அதுதான் பிரச்சினையே. அவர் நடிக்க முன்வந்தால் நான் கடவுள்-2 எப்போது வேண்டுமானாலும் உருவாகலாம் என்று சூசகமாக பதிலுரைத்துள்ளார் பாலா.