ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நரேன், சிருஷ்டி டாங்கே, சூரி நடித்துள்ள படம் கத்துக்குட்டி. தஞ்சை மண்ணின் பின்னணியில் சொல்லப்படும் கிராமத்து காதல் காமெடி கதை. இந்தப் படத்தை சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர்,ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவுக்கு போட்டுக் காட்டினார். படத்தை பார்த்த வைகோவிற்கு மிகவும் பிடித்து விட்டது. அவர் தனது சொந்த செலவில் ஒரு சிறப்பு காட்சியை ஏற்பாடு செய்தார்.
அந்த காட்சிக்கு தனக்கு நெருக்கமான அரசியல் நண்பர்களையும், சினிமா நண்பர்களையும் அழைத்திருந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னி அரசு, எழுத்தாளர் தியாகு, இயக்குனர் பாரதிராஜா உள்பட பலர் சிறப்பு காட்சிக்கு வந்து படத்தை பார்த்துவிட்டு, தயாரிப்பாளரையும், இயக்குனரையும் பாராட்டிச் சென்றனர்.
படத்தை பார்த்துவிட்டு பாரதிராஜா கூறியதாவது: ஒரு படத்தைப் பார்க்க வைகோ அழைக்கிறார் என்றாலே அந்தப் படம் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்பதை என்னால் யோசிக்க முடிந்தது. காரணம், வைகோ அந்தளவுக்குத் தேர்ந்த சினிமா ரசிகர். ஒவ்வொரு காட்சியையும் இயக்குநரின் நுணுக்கத்தை விட சிறப்பாகக் கவனிக்கக் கூடியவர். அதனால் கத்துக்குட்டி படத்தில் ஏதோவொரு நல்ல விஷயம் நிச்சயம் இருக்கும் என நம்பித்தான் படம் பார்க்க வந்தேன். பல நல்ல விஷயங்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடியோடு கலகலப்பாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் தம்பி சரவணன்.
குறிப்பாக படத்தில் சூரியின் காமெடி. நல்ல விஷயங்களை நாடக பாணியில் சொல்லாமல் சுவாரஸ்யமாகச் சொல்லி, பார்ப்பவர் மனதைக் கொக்கிப் போட்டு இழுக்க வைத்திருக்கிறார். வசனங்கள் ஒவ்வொன்றும் கூர்மையாக இருக்கின்றன. தஞ்சை மக்களின் கொண்டாட்டங்களையும் கூடவே அவர்களின் அன்றாடத் துயரங்களையும் மிகச் சரியாகப் பதிவு செய்திருக்கும் கத்துக்குட்டி திரைப்படம் மாபெரும் வெற்றியை அடைய வேண்டும். என்றார் பாரதிராஜா.