தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
2015 ம் ஆண்டில் வெளியான தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை 150ஐத் தொட்ட சிறப்பை இந்த செப்டம்பர் மாதம் பெற்றுள்ளது. கடந்த 24ம் தேதியுடன் முடிவடைந்த செப்டம்பர் மாத கடைசி வெளியீட்டுத் தேதியுடன் இந்த மாதத்தில் 19 திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.
வழக்கம் போலவே இந்த மாதத்திலும் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் ஏமாற்றிய படங்களாகவும் மாறியிருக்கிறது. எதிர்பாராத படங்கள் வசூல் படங்களாக மாறிய சம்பவங்களும் நடந்திருக்கிறது.
திரைப்பட வெற்றி என்பது இன்னமும் புரிந்து கொள்ள முடியாத ஒரு விஷயமாகவே படத்தை படைப்பவர்களுக்கும் அதில் நடிப்பவர்களுக்கும் இருக்கிறது. எந்த சமயத்தில் எந்தப் படத்தை ரசிகர்கள் ரசிக்கிறார்கள் என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.
தனித்து நிற்கும் 'தனி ஒருவன்'
கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியான 'தனி ஒருவன்' படம் ஒரு மாத காலமாக பல திரையரங்குகளிலும் நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் அழுத்தமான வெற்றி அதற்கடுத்து இந்த மாதத்தில் வெளிவந்த சில ஆக்ஷன் படங்களின் வெற்றியை பதம் பார்க்கக் காரணமாக அமைந்துவிட்டது என்பதுதான் உண்மை.
'தனி ஒருவன்' போன்ற ஒரு 'பிரில்லியன்ட்' ஆன ஆக்ஷன் படத்தைப் பார்த்த ரசிகர்கள் அதற்கடுத்து வெளிவந்த சுமாரான ஆக்ஷன் படங்களான 'பாயும் புலி, யட்சன்' போன்ற படங்களைப் பார்க்கத் தயாராக இல்லை. இனி ஆக்ஷன் படங்கள் எடுப்பவர்கள் 'தனி ஒருவன்' மாதிரியான திரைக்கதை அமைப்பை தங்களது படத்தில் கொஞ்சமாவது வைத்திருக்க வேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்பு வந்துவிட்டது.
செப்டம்பர் 4ம் தேதி வெளியான நான்கு படங்களில் 'பாயும் புலி' படம் மட்டும்தான் பெரிய படம். இயக்குனர் சுசீந்திரன் - விஷால் கூட்டணியின் முந்தைய வெற்றிப் படமான 'பாண்டிய நாடு' படத்தை வைத்து இந்த 'பாயும் புலி' படமும் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், அதிரடியான ஆக்ஷன் எதுவும் இல்லாமல் இந்த 'பாயும் புலி' பாயாமலே போய்விட்டது.
செப்டம்பர் 11ம் தேதி வெளியான ஆறு படங்களில் அதிகப்படியான விளம்பரங்களுடன் வெளிவந்த படமாக 'யட்சன்' அமைந்தது. இதற்கு முன் அஜித், ஆர்யா, நயன்தாரா, டாப்ஸீ நடித்த சுமாரான வெற்றிப் படமான 'ஆரம்பம்' படத்தைக் கொடுத்த இயக்குனர் விஷ்ணுவர்தன் இப்படி ஒரு மிகச் சுமாரான என்று கூட சொல்ல முடியாத ஒரு படத்தைத் தந்தது அனைவருக்கும் அதிர்ச்சியாக அமைந்தது. ஆர்யாவின் மார்க்கெட்டை இந்தப் படத்தின் தோல்வி மேலும் வீழ்த்தியது.
பிரேம்ஜியெல்லாம் ஹீரோவாக நடித்த 'மாங்கா' படத்தைப் பத்திரிகையாளர் காட்சி கூட திரையிட முடியாத அளவிற்கு மோசமான படம் என்று அவர்களுக்கே தெரிந்திருக்கிறது. தேசிய விருது பெற்ற பாடலாசிரியரான பா.விஜய் இயக்குனராக அறிமுகமான 'ஸ்ட்ராபெர்ரி', வேறு எந்தப் படத்தின் ரிசல்ட்டும் சரியாக இல்லாததால் சில ஊர்களில் சுமாரான வசூலைப் பெற்றதாகச் சொல்கிறார்கள்.
செப்டம்பர் 17ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியான மூன்று படங்களில் இரண்டு படங்களான 'த்ரிஷா இல்லனா நயன்தாரா, மாயா' இரண்டு படங்களுமே வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன.
'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தின் வெற்றி இதில் குறிப்பிட வேண்டிய ஒன்று. சுமார் 3 கோடி ரூபாய் செலவில் தயாரான இந்தப் படம் இதுவரை 15 கோடி வரை வசூலித்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
இந்த ஆண்டின் துவக்கத்திலேயே 'டார்லிங்' பட வெற்றி மூலம் ஆச்சரியப்பட வைத்த ஜி.வி.பிரகாஷ்குமார், 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' வெற்றி மூலம் தற்போதைக்கு 'டிமான்ட்' நடிகராகவிட்டார்.
நயன்தாராவையும் விட்டு வைக்காத பேய்
நயன்தாராவையும், பேயையைம் நம்பி எடுக்கப்பட்ட படமான 'மாயா', தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் நல்ல வசூலைத் தருவதாக தயாரிப்பாளர்களே வெற்றி விழா கொண்டாடி அறிவித்துவிட்டார்கள்.
கவுண்டமணி ரீ-என்ட்ரி
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கவுண்டமணி நடித்த '49 ஓ' சிறந்த படமாக இருந்தாலும் இன்றைய தலைமுறை ரசிகர்களை அதிகம் ஈர்க்கவில்லை.
தேசிய விருது பெற்ற குற்றம் கடிதல்
செப்டம்பர் 24ம் தேதி பக்ரீத் தினத்தன்று வெளியான ஆறு படங்களுமே மினிமம் பட்ஜெட் படங்கள்தான். இதில் தேசிய விருது பெற்ற 'குற்றம் கடிதல்' படமும் அடங்கும். இந்தப் படத்தை விமர்சகர்கள் அனைவரும் பாராட்டி வருகிறார்கள். தேசிய விருது பெற்று சிறப்பித்த அளவு வசூல் ரீதியாகவும் சிறப்பிக்குமா என்பது இனிமேல்தான் தெரியும். 'கிருமி' படம் இன்னும் அழுத்தமாக எடுக்கப்பட்டிருந்தால் தரமான வெற்றியைக் கொடுத்திருக்கும் என்று தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மற்ற படங்கள் புதுமுகங்கள் நடித்துள்ள படங்களே. அவற்றில் 'உனக்கென்ன வேணும் சொல்லு' மற்றுமொரு பேய்ப் படமாக விமர்சன ரீதியாக வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்தப் படங்களின் வசூல் கண்டிப்பாக அமோகமாக இருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் நல்ல வசூலைப் பெற்று லாபத்தைத் தருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
2015ம் ஆண்டில் இந்த செப்டம்பர் மாதத்துடன் முக்கால் ஆண்டு முடிவடையப் போகிறது. இதுவரை 159 படங்கள் வெளியாகியுள்ளன. அடுத்த மூன்று மாதங்களில் திரையுலகின் முக்கிய வெளியிட்டுத் திருவிழாவான தீபாவளி உட்பட பல வெளியிட்டுத் தேதிகள் உள்ளன. எப்படியும் இந்த ஆண்டும் 200 படங்கள் வெளிவரும் என்பது நிச்சயம்.
அக்டோபர் 1ம் தேதியில் இருந்தே 'புலி' படத்தின் மூலம் அடுத்த காலாண்டுக்கான கொண்டாட்டம் ஆரம்பமாக உள்ளது. இனி வரும் 2015ம் ஆண்டின் 90 நாட்களும் தமிழ்த் திரையுலகத்திற்கு முக்கியமான நாட்களே...
2015 - செப்டம்பர் மாதம் வெளியான திரைப்படங்கள்
செப்டம்பர் 4
பாயும் புலி
சவாலே சமாளி
போக்கிரி மன்னன்
பானு
செப்டம்பர் 11
9 திருடர்கள்
நானாக நானில்லை
மாங்கா
ஜவ்வு மிட்டாய்
ஸ்ட்ரொபெர்ரி
யட்சன்
செப்டம்பர் 17
மாயா
த்ரிஷா இல்லனா நயன்தாரா
49 ஓ
செப்டம்பர் 24
திருட்டு விசிடி
காதல் அகதீ
ஜிப்பா ஜிமிக்கி
உனக்கென்ன வேணும் சொல்லு
கிருமி
குற்றம் கடிதல்