தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஆரோகணம், தங்கமீன்கள் போன்ற படங்களை ஜனரஞ்கமான படங்களை தயாரித்தவர் ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் சதீஷ். இதில் தங்கமீன்கள் படம் கடந்தாண்டு தேசிய விருது பெற்றது. அதேப்போன்று இந்தாண்டு இவர் தயாரித்திருக்கும் குற்றம் கடிதல் படமும் படம் ரிலீஸ்க்கு முன்பே தேசிய விருது பெற்றது. பிரம்மா இயக்கியிருந்தார். இந்தப்படம் இருதினங்களுக்கு முன்னர் செப்., 24ம் தேதி ரிலீஸானது.
ஆசிரியர்களின் அலட்சியம், மீடியாக்களின் அவசரம், செக்ஸ் கல்வியின் அவசியம்... உள்ளிட்டவைகளை உறுதியாக உரத்த குரலில் பேசியிருக்கும் "குற்றம் கடிதல்", தேசிய விருதை குவித்தது மட்டுமல்லாது... வசூலையும் வாரி குவிக்கும்! குவிக்க வேண்டும். ஆனால் இந்தப்படத்திற்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இல்லை.
இதுப்பற்றி இப்படத்தின் தயாரிப்பாளரான சதீஷ், ஆதங்கத்துடன் நம்மிடம் பதிவு செய்தாவது...
எனது நிறுவனம் தொடர்ந்து நல்ல நல்ல அருமையான படங்களை தயாரித்து வருகிறது. கடந்தாண்டும் தேசிய விருது கிடைத்தது, இந்தாண்டு தேசிய விருது பெற்றுள்ளது. ஆனால் தேசிய விருது பெற்ற குற்றம் கடிதல் படத்திற்கு மக்கள் வரவேற்பு தர மாட்டுகிறார்கள். மாறாக பிட் பட ரேஞ்சுக்கு இருக்கும் படங்களுக்கு மக்களின் கூட்டம் அலைமோதுகிறது. அதிலும் சமீபத்தில் வௌிவந்த ஒரு படத்திற்கு ரசிகர்கள் கூடுகிறார்கள். பெண்களே சகட்டு மேனிக்கு திட்டிய படத்திற்கு பெண்களே அதிகளவில் செல்கின்றனர். இதையெல்லாம் பார்க்கும் மக்களின் ரசனை மாறிவிட்டது என்றே தோன்றுகிறது. நல்ல படம் என்ற பெயரை மட்டும் எடுத்து நான் தொடர்ந்து நஷ்டப்பட விரும்பவில்லை. 2009ம் நான் வௌியிட்ட வேலுபிரபாகரனின் காதல் கதை படம் அப்போதே ரூ.3 கோடி லாபம் தந்தது. ஆகையால் அந்தப்படத்தை நான் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யலாம் என்று நினைத்திருக்கிறேன்.
இனி நல்ல படங்களுக்கு மக்கள் வரவேற்பு தரமாட்டார்கள். வருங்காலங்களில் இனி தியேட்டர்களில் பிட் படம் தான் அதிகம் ஓடும், தேசிய விருது பெற்ற படங்களுக்கு எல்லாம் மக்கள் வரவேற்பு தர மாட்டார்கள் என்று ஆதங்கத்துடன் கூறினார் சதீஷ்.
சதீஷின் ஆதங்கத்தை பார்க்கும் போது மக்களின் ரசனை மாறிவிட்டதோ என்று எண்ண தோன்றுகிறது. அதேசமயம் இந்தாண்டு தேசிய விருது பெற்ற மற்றொரு படமான காக்கா முட்டை படத்திற்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்தார்களே...! என்பதை நாம் இங்கு நினைவில் கூற விரும்புகிறோம்.