பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சேலத்தில், தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த, நடிகை நயன்தாராவை காண, ரசிகர்களும், பொதுமக்களும் முண்டியடித்ததால், போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கட்டுப்படுத்தினர். சேலம், புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்படைந்தது.
சேலத்தில், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதாக, நடிகை நயன்தாரா வந்தார். அவர் வரும் தகவல் அறிந்து, ரசிகர்களும், பொதுமக்களும், புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் திரண்டனர். அரசியல் கட்சி தலைவர்களின் கூட்டத்தை மிஞ்சும் வகையில், நயன்தாராவை காண கூட்டம் கூடியிருப்பதை கண்டு,சேலம் போலீஸார், அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த, போலீஸாரை குவித்தனர். சாலையின் இரு புறமும், மக்கள் கூட்டமாக நின்றதால், அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. டிராஃபிக் போலீஸார், போக்குவரத்தை மாற்றியமைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
நயன்தாரா காரில் வந்து இறங்கியதும், அவரை காண வேண்டும் என்ற ஆர்வத்தில், பொதுமக்கள் முண்டியடித்து முன்னேறி சென்றனர். இதனால், நெரிசல் ஏற்பட்டு பலர் கீழே விழுந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய போலீஸார், லேசான தடியடிநடத்தி மக்களை விரட்டினர். இதனால், அந்த பகுதி பரபரப்புக்குள்ளாகியது. நயன்தாரா செல்லும் வரை, சாலையை முற்றுகையிட்டபடி மக்கள் நின்றனர். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போலீஸார் கூறியதாவது: பொதுமக்கள் கூட்டம் இவ்வளவு வரும் என்று எதிர்பார்க்கவில்லை. கூட்டத்தை கட்டுப்படுத்த லேசாக தடியடி நடத்த வேண்டியதாகி விட்டது. இதில் யாருக்கும் எவ்வித பாதிப்புமில்லை. போக்குவரத்து மாற்றப்பட்டதால், பயணிகளும் சிரமத்துக்குள்ளாகவில்லை.
இவ்வாறு, அவர் கூறினார்.