‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
நடிகரும், பத்திரிகையாளருமான சோ ராமசாமி, உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில், தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச்சூழலில் சோ ராமசாமி இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்கள் வெளியாகி வருகின்றன. இப்படியொரு பொய்யான தகவலை நடிகை குஷ்புவும் வெளியிட்டிருக்கிறார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், சோ ராமசாமி அவர்கள் இறந்துவிட்டதாகவும், அவருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்றும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதைப்பார்த்து பலரும் குஷ்புவுக்கு, சோ ராமசாமி நலமாக இருப்பதாக ரீ-டுவீட் செய்தனர். இதனையடுத்து தான் பொய்யான செய்தியை வெளியிட்டுவிட்டோமே என்பதை உணர்ந்த குஷ்பு, அதற்காக டுவிட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார். அதில், ''சோ ராமசாமி அவர்கள் இறந்துவிட்டதாக ஒரு பதிவை போட்டுவிட்டேன், அது பொய்யான தகவல், என் தவறுக்காக நான் ஆயிரம் முறை மன்னிப்பு கேட்கிறேன், அவர் நீண்டகாலம் வாழ வேண்டும் என்று கூறியுள்ளார்.