தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சிவகார்த்திகேயனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்கு வந்துள்ள மற்றொரு நிகழ்ச்சி தொகுப்பாளர் மா.கா.பா.ஆனந்த். இவரும் அவரைப்போலவே காமெடியை முன்வைத்துதான் களமிறங்கினார். அந்த வகையில், வானவராயன் வல்லவராயன் படத்தில் கிருஷ்ணாவுடன் இணைந்து நடித்தார். அந்த படம் பெரிய ஹிட் இல்லை. என்றாலும் மா.கா.பா.ஆனந்தின் நடிப்பு பேசப்பட்டது.
அதனால் அந்த படம் வெளியான நேரத்தில் அவருக்கு பஞ்சுமிட்டாய், அட்டி, தீபாவளி துப்பாக்கி, நவரச திலகம், தலதளபதி என பல படங்கள் புக்காகி விட்டன. இதில் நவரச திலகம் தற்போது ரிலீசுக்கு தயாராகி விட்டது. அதோடு, இந்த படம் மா.கா.பாவுக்கு பெரிய திருப்பத்தை கொடுக்கும் என்று அப்படத்தில் நடித்துள்ள சிலர் கூறுகிறார்கள்.
மேலும், நவரச திலகம் படம் கிராமத்து காதல் கதையில் உருவாகியிருக்கிறது. அதில் ரொமான்டிக் மற்றும் காமெடி காட்சிகள் அதிகமாக உள்ளது. ரியல் எஸ்டேட் ஓனராக நடித்துள்ள மாகாபாவின் நண்பராக கருணாகரன் நடித்துள்ளார். இரண்டு பேரும் படம் முழுக்க செம லூட்டி அடித்திருக்கிறார்கள்.
படப்பிடிப்பு நடந்தபோதே ஸ்பாட்டில் வேடிக்கை பார்த்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர். அந்த அளவுக்கு மாகாபாவும். கருணாகரனும் காமெடி காட்சிகளில் சிறப்பாக நடித்தனர். அதனால் இந்த படம் வெளியாகும்போது மாகாபாவுக்கு நான்கைந்து புதிய படங்களாவது புதிதாக புக்காகும் என்கிறார்கள்.
அதோடு, இப்போது சினிமாவில் பிசியாக நடித்துக்கொண்டிருந்தாலும் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் பங்கேற்று வரும் மா.கா.பா.ஆனந்தினால், பின்னர் டிவி பக்கம் செல்லவே முடியாது. அந்த அளவுக்கு சினிமாவில் பிசியாகி விடுவார் என்கிறது நவரச திலகம் வட்டாரம்.