பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'புலி' படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியாகப் போவதாக இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் செய்தி பரவியது. அதனால் விஜய் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். புத்தம் புதிய டிரைலராக பழைய டிரைலரில் இருந்து மிகவும் மாறுபட்டு 'புலி' படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியாகும் என அவர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், நேற்று மாலை வெளியிடப்பட்ட இரண்டாவது டிரைலர் விஜய் ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத்துவிட்டது.
இரண்டாது டிரைலர், முதல் டிரைலரில் உள்ள பல காட்சிகளைக் கொண்டாதாகவே இருந்தது. புதிதாக ஒரு சில காட்சிகளை மட்டுமே அதில் இணைத்திருந்தனர். அதிலும் இரண்டாவது டிரைலரில் இடம் பெற்றுள்ள கிராஃபிக்ஸ் காட்சிகள் மிகவும் 'அமெச்சூர்' ஆக வேறு உள்ளன. 'புலி' படத்தின் முதல் டிரைலர் சில நாட்களுக்கு முன்னர்தான் 1 லட்சம் லைக்குகளைக் கடந்து இந்தியாவிலேயே அதிக லைக்குகளைப் பெற்ற டிரைலர் என்ற சாதனையைப் புரிந்தது. அப்படிப்பட்ட ஒரு படத்தின் இரண்டாவது டிரைலரை வெளியிடும் போது எவ்வளவு கவனமாக வெளியிட வேண்டும்.
ஆனால், வித்தியாசமான பறவைகள் கூட்டமாகப் பறப்பது, 'ஹல்க்' மனிதன் போன்ற உருவம் வருவது, கரும் புலியோ, சிறுத்தையோ பாய்வது, ராட்சத ஆமை ஒன்றிடம் விஜய் பணிவாக ஐயா என்றழைப்பது ஆகிய டிரைலரில் காட்சிகளில் கிராஃபிக்ஸ் என்பது மிக மிகச் சாதாரணமாக உள்ளது. 'பாகுபலி' படத்தில் உலகத் தரம் வாய்ந்த கிராஃபிக்ஸ் காட்சிகளைப் பார்த்து விட்ட ரசிகர்களுக்கு 'புலி' ஏமாற்றத்தைக் கொடுத்து விடுமோ என்றுதான் அஞ்ச வேண்டியிருக்கிறது.
பத்து நாட்களுக்கு முன்னர்தான் 'புலி' புரோமோ பாடல் என்று தேவிஸ்ரீ பிரசாத்தை ஆட வைத்து ரசிகர்களை ஏமாற்றினார்கள். இப்போது இரண்டாவது முறையாக நேற்று ஏமாற்றியிருக்கிறார்கள். ஏமாற்றங்கள் இத்துடன் நிற்குமோ அல்லது அக்டோர் 1ம் தேதி பெரிய ஏமாற்றம் காத்திருக்குமா என்பதை 'புலி' குழுவினர்தான் தெரிவிக்க வேண்டும்.