'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
முன்னணி நடிகர்களின் படங்களை மட்டுமே வாங்கும் டிவி சேனல்கள், பிரபலமில்லாத நடிகர்களின் படங்களை வாங்க மறுத்து வருகின்றன. இதையடுத்து சின்ன படங்களையும் அதற்கேற்ப ஒரு தொகையை கொடுத்து வாங்க வேண்டும் என்ற தயாரிப்பாளர் சங்கம் நிர்பந்தம் செய்தது. இதையடுத்து தயாரிப்பாளர் சங்கம்- சின்னத்திரை சேனல்கள் இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் தற்போது சினிமா சம்பந்தப்பட்ட எந்த விழாக்களுக்கும் சேனல்கள் அழைக்கப்படவில்லை. அதோடு, புதிய படங்களும் சேனல்களுக்கு விற்பனை செய்வது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஒரு மீட்டிங் நடைபெற்றது. அதில் எப்எம்எஸ் என்று சொல்லப்படும் வெளிநாட்டு உரிமையை இனிமேல் தயாரிப்பாளர் சங்கம் சார்பிலேயே வாங்கி படங்களை வெளிநாடுகளில் விநியோகம் செய்வது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாம். காரணம், எப்எம்எஸ் ஏரியா என்றாலே 5 லட்சம், 10 லட்சத்துக்கும் மேல் விநியோகஸ்தர்கள் கொடுப்பதில்லையாம். ஆனால், அவர்கள் வாங்கும் படத்தை 40 வெளிநாடுகளில் திரையிடுகிறார்களாம். அந்த வகையில், ஒரு நாட்டிற்கு ஒரு லட்சம் வாங்கினாலும் 40 லட்சம் சம்பாதிக்கிறார்களாம். ஆனால் படத்தை தயாரித்தவர்களுக்கு அவர்கள் கொடுப்பதோ 5 லட்சம்தானாம்.
அதுமட்டுமின்றி, சமீபகாலமாக பெரும்பாலான படங்களை விநியோகஸ்தர்கள் வாங்குவதில்லை. அந்த படங்களை நேரடியாக தியேட்டர்களிலேயே தயாரிப்பாளர்கள் ரிலீஸ் செய்கிறார்கள். மேலும், சிறிய படங்களுக்கு எதிர்பார்த்தபடி பெரிய தியேட்டர்கள் கிடைப்பதில்லை. இந்தநிலையில், எதிர்காலத்தில் படங்கள் அனைத்தையும் தயாரிப்பாளர் சங்கம் மூலமே தியேட்டர்களில் வெளியிட வேண்டும் என்கிற பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டுள்ளதாம். இதனால் சிறிய படங்களுக்கும் மல்டி ப்ளக்ஸ் தியேட்டர்கள் கிடைக்குமாம். தயாரிப்பாளர் சங்கம் எடுக்கும் இத்தகைய அதிரடி திட்டம் சினிமாவில் புதிய மாற்றத்தை கொண்டு வரும் என்று சின்ன பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.