தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் படத்தில் பள்ளி மாணவியாக நடித்தவர் மனீஷா யாதவ். அதன்பிறகு சுசீந்திரனின் ஆதலால் காதல் செய்வீர் மற்றும் ஜன்னல் ஓரம், பட்டைய கிளப்பனும் பாண்டியா ஆகிய படங்களில் நடித்தார். பின்னர், சீனு ராமசாமியின் இடம் பொருள் ஏவல் படத்தில் நடிக்க கமிட்டானவர், அவர் மீது சில புகார்களை சொல்லிக்கொண்டு அந்த படத்தில் இருந்து வெளியேறினார்.
அப்படி ஒரு டைரக்டர் மீதே அவர் புகார் சொன்னதால் பின்னர் மனீஷாவை புக் பண்ண மற்ற டைரக்டர்கள் தயங்கி நின்றனர். இந்த நிலையில்தான் ஜி.வி.பிரகாஷ் நடிக்கயிருந்த த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்துக்கு மனீஷாவை புக் பண்ணினார் ஆதிக் ரவிச்சந்திரன். அதோடு சரியான வாய்ப்பு இல்லாததால் கவர்ச்சியில் எந்த ரேஞ்சுக்கும் செல்லத்தயாராக இருந்த மனீஷாவை படுகவர்ச்சியாகவும் நடிக்க வைத்தார்.
தற்போது அப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தாலும், படத்துக்கு கண்டபடி விமர்சனங்களும் இணையதளங்களில் வெளியாகிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், மனீஷா யாதவை சந்திக்கும் ரசிகர்கள் அவரை பிட் பட நடிகை ரேஞ்சுக்கு விமர்சிக்கிறார்களாம். இதனால் அதிர்ச்சியடைந்துள்ள மனீஷா, இந்த படம் ஓடி முடிக்கிற வரை ஷாப்பிங், ஹோட்டல் என்று பொது இடங்களில் தலைகாட்டக்கூடாது என்று முடிவெடுத்துள்ளாராம்.