ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தொடர்ந்து தோல்விப்படங்களைக் கொடுத்து வந்த மணிரத்னத்துக்கு அவர் சமீபத்தில் இயக்கிய ஓ காதல் கண்மணி படம் கை கொடுத்தது. துல்கர் சல்மான், நித்யா மேனனை வைத்து, மணிரத்னம் இயக்கிய 'ஓகே கண்மணி' படம் கமர்ஷியலாக வெற்றிபெற்றது. அதைத் தொடர்ந்து தனது அடுத்த பட வேலைகளில் பிசியாகி விட்டார் மணிரத்னம். 'ஒகே கண்மணி' படத்தைப் போலவே தனது அடுத்த படத்தின் கதையையும் 'இளைஞர்களை' மனதில் வைத்து எழுதி இருக்கிறாராம் மணிரத்னம்.
இந்தப்படத்திலும் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கிறார். இன்னொரு ஹீரோவாக கார்த்தி நடிக்கிறார். இரண்டு ஹீரோக்கள் நடிக்கும் இந்தப் படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். கார்த்திக்கு ஜோடியாக 'ஓகே கண்மணி' படத்தில் நடித்த நித்யா மேனனும், துல்கர் சல்மானுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷும் நடிக்கிறார்கள். மணிரத்னத்தின் ஆஸ்தான இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் துவங்குகிறது.