தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
திருச்செந்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மதுரை விமான நிலையம் வந்த நடிகர் சிவகார்த்திகேயனை கமலின் ரசிகர்கள் தாக்கியதாக கூறப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நடிகர் சிவகார்த்திகேயன், தான் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, நேற்று காலை, 7:25 மணிக்கு, ஒரே விமானத்தில், நடிகர்கள் கமல், சிவகார்த்திகேயன், நடிகை ஹன்சிகா, மதுரை வந்தனர். ரசிகர்கள் வரவேற்ற பின், கமல் புறப்பட்டுச் சென்றார்; ரசிகர்கள் அங்கேயே நின்றிருந்தனர். ஐந்து நிமிடங்கள் கழித்து வந்த சிவகார்த்திகேயனை, பாதுகாப்பு கருதி, பயணிகள் உள்ளே செல்லும் வழியாக வெளியேற, விமான நிலைய போலீசார் அனுமதித்தனர். அவ்வழியே சிவகார்த்திகேயன் வந்தபோது, கமல் ரசிகர்கள் சூழ்ந்தனர்.
ஓட்டமும், நடையுமாக சென்ற சிவகார்த்திகேயனை விரட்டிய ரசிகர்களில் ஒருவர், முதுகில் அடிக்க முயன்றார்; சிலர், அவரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, அவரை முதுகில் அடிப்பது போன்ற வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து, போலீசில் புகார் செய்யப்படவில்லை.
விமான நிலைய போலீசார் கூறியதாவது: இச்சம்பவம் எதிர்பாராதவிதமாக நடந்தது; ரசிகர்கள் கூட்டமாக இருந்ததால், அவரை காணத்தான் வந்திருக்கிறார்கள் எனக்கருதி, மாற்றுப்பாதை வழியாக அழைத்து வந்தோம். அப்போது, சிவகார்த்திகேயன் நடித்த, ரஜினி முருகன் படத்தலைப்பு குறித்து ஒருவர், கமென்ட் அடித்து, தாக்க முற்பட்டார்.இவ்வாறு, போலீசார் கூறினர்.
இதற்கிடையே, கமலின் மகள் ஸ்ருதிஹாசனை விமர்சனம் செய்ததால், சிவகார்த்திகேயன் தாக்கப்பட்டதாக, வாட்ஸ் ஆப்பில் தகவல் பரவியது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் சிவகார்த்திகேயன் தன் டுவிட்டரில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், நான் நலமா உள்ளேன், உங்களுடைய ஆசீர்வாதம் தான் இதற்கு காரணம், இந்த நேரத்தில் எனக்கு ஆதரவு தெரிவித்து வரும் அனைவருக்கும் என்று நன்றி என்று கூறியுள்ளார்.