இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஆர்யா நடித்த படங்கள் வரிசையாக தோல்வியடைந்து வருகின்றன. 'புறம்போக்கு','வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க', 'யட்சன்' என ஆர்யா நடித்த 3 படங்கள் வரிசையாக தோல்வியடைந்ததால் அவரது நட்சத்திர நாற்காலி ஆட்டம் கண்டுள்ளது. இனி வரும் படங்களாவது வெற்றிப்படமாக இருந்தால்தான் ஆர்யாவால் தாக்குப்பிடிக்க முடியும். இல்லை என்றால் பரத், ஷாம், ஸ்ரீகாந்த் வரிசையில் ஆர்யாவும் சேர்ந்தவிடுவார் என்பது உறுதி. இந்த ஆபத்திலிருந்து தப்பித்தாக வேண்டுமே என்ற கவலையில் உள்ளாராம் ஆர்யா.
இந்நிலையில், 'அனேகன்' படத்தை இயக்கிய கே.வி.ஆனந்த் ஆர்யாவிடம் கதை சொல்ல அணுகி இருக்கிறார். கதையைக் கேட்ட ஆர்யா உடனடியாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். சமீபத்தில் ரிலீசாகி சூப்பர் ஹிட்டான படம் 'தனி ஒருவன்'. 'ஜெயம்' ரவி கதாநாயகனாக நடித்த இப்படத்தை தொடர்ந்து 'ஏ.ஜி.எஸ்.' நிறுவனம் தயாரிப்பில் கேவி ஆனந்த் ஒரு படத்தை இயக்க உள்ளார்.
இந்தப் படத்தில்தான் ஆர்யா நடிக்கிறார். ஏற்கெனவே அஜித், சிவகார்த்திகேயன் ஆகியோரை வைத்து கே.வி.ஆனந்த் படம் இயக்கப் போகிறார் என்ற தகவல்கள் வெளியாகின. அந்த செய்திகளை மறுத்தார் கே.வி.ஆனந்த். ஆனால் ஆர்யாவை கே.வி.ஆனந்த இயக்க இருப்பது உறுதி என்றும், இது சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் தற்போது நடந்து வருவதாகவும் இப்படம் குறித்த அதிகாரபூர்வமான தகவல்களை விரைவில் வெளியிட இருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.