இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
மலையாள சினிமாவில் காமெடி கலந்த குணச்சித்திர நடிகர்களில் கவனிக்கத்தக்க இடத்தை பெற்றவர் நடிகர் இந்திரன்ஸ்.. கிட்டத்தட்ட கடந்த 35 வருடங்களில் தனது வித்தியாசமான டயலாக் டெலிவரி மற்றும் பாடி லாங்குவேஜால் வரும் காட்சிகளில் எல்லாம் ரசிகர்களை சிரிக்கவைத்தவர். தமிழில் கூட ஷங்கர் இயக்கிய நண்பன் படத்தில் காலேஜ் பியூனாக நடித்திருந்தாரே அவர்தான் இவர். தற்போது மலையாளத்தில் தயாராகியுள்ள 'புத்தனும் சாப்ளினும் சிரிக்குன்னு' என்கிற படத்தில் கதையின் நாயகனாக அதாவது சார்லி சாப்ளின் போலவே நடித்துள்ளார் இந்திரன்ஸ்.
சினிமாவில் நுழைந்த காலத்தில் காஸ்ட்யூம் டிசைனராக வாழ்க்கையை தொடங்கினாலும், பின்னர் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி காமெடி நடிகராக மாறிய இந்திரன்ஸ், கடந்த சில வருடங்களாக குணச்சித்திர நடிகராகவும் பரிணமித்து வருகிறார். குறிப்பாக கடந்த வருடம் சுரேஷ்கோபி நடிப்பில் வெளியான 'அப்போதேகேறி' படத்தில், வித்தியாசமான நோயால் பாதிக்கப்பட்ட மகன் ஜெயசூர்யாவுக்காக தனது வாழ்நாளை சிரமத்துடன் கழிக்கும் பாசமான தந்தை கதாபாத்திரத்தில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் இந்திரன்ஸ்..
இதற்காக கடந்த வருடத்திற்கான கேரள அரசு வழங்கும் சிறந்த நடிகருக்கான ஸ்பெஷல் ஜூரி விருதையும் பெற்றார். இத்தனை வருடங்களில் தனக்கான உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே என வருத்தப்பட்டு, விருதுகள் பற்றிய கனவையெல்லாம் தூக்கி தூர ஏறிந்துவிட்ட நிலையில் அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது அவர் முகத்தில் லேசாக புன்னகையை வரவழைத்துள்ளது.. சாதாரண கடைநிலை நடிகர் கூட எதிர்பார்ப்பது தனக்கான அங்கீகாரத்தை தானே..?