'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சில நடிகைகள் திருமணம் செய்து கொண்ட பிறகு குடும்பம் குழந்தை குட்டிகள் என்று வாழ்க்கையை மாற்றிக்கொள்வார்கள். ஆனால் சிலர், சினிமாவில் ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து வருவார்கள். அந்த வரிசையில், திருமணம் செய்து கொண்டு இரண்டு பிள்ளைகளுக்கு அம்மாவான ஸ்ரீதேவி கிட்டத்தட்ட 17 வருடங்களுக்கு பிறகு சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதேபோல் ஜோதிகாவும் இரண்டு பிள்ளைகளை பெற்றெடுத்த பிறகு 36 வயதினிலே படத்தில் என்ட்ரி ஆனார்.
இந்த வரிசையில், டைரக்டர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்ட அமலாபாலும், திருமணத்திற்கு பிறகு சூர்யா தயாரித்து கெஸ்ட் ரோலில் நத்துள்ள பசங்க-2 படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருக்கிறார். அதையடுத்து கணவர் ஏ.எல்.விஜய், பிரபுதேவாவுடன் இணைந்து தயாரிக்கும் படவேலைகளில் ஈடுபட்டு வரும் அமலாபால், அடுத்தபடியாக தெலுங்கில் விஷ்ணுமஞ்சு நடிக்கும் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.
மேலும், ஸ்ரீதேவி, ஜோதிகா போன்ற நடிகைகள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடிப்பதைப்போன்று அமலாபாலும், தனது குடும்ப இமேஜை பாதிக்காத அழுத்தமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிக்க முடிவெடுத்திருக்கிறாராம்.