தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'ஸ்ரீமந்துடு' படத்தின் வெற்றிக்குப் பிறகு மகேஷ் பாபு தமிழ், தெலுங்கில் நடித்து வரும் 'பிரம்மோற்சவம்' படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் ஆரம்பமானது. அங்குள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான அரங்கில் 'பிரம்மோற்சவம்' படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதே பிலிம் சிட்டியின் பக்கத்து அரங்கில், தான் நடித்து வரும் 'தில்வாலே' படப்பிடிப்பில் இருந்த ஷாரூக்கான நட்பு ரீதியில் மகேஷ்பாபுவைப் பார்க்க 'பிரம்மோற்சவம்' அரங்கிற்கு சென்றுள்ளார்.
அங்கு மகேஷ்பாபு, அவருடைய மனைவி நம்ரதா ஷிரோத்கர், மகள் சிதாரா ஆகியோரைச் சந்தித்து ஷாருக்கான் பேசினார். படப்பிடிப்பில் இருந்த அனைவருக்கும் ஷாரூக்கானின் திடீர் வருகை உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளித்தது. ஷாரூக்கான் தன் படப்பிடிப்புத் தளத்திற்கு வந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த மகேஷ்பாபு, “பிரம்மோற்வம்' படப்பிடிப்பில் ஷாரூக்கானைச் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியானது. மொத்த நட்சத்திரங்களும், கலைஞர்களும் ஆச்சரியப்பட்டனர். பணிவான நன்றி சார்,” என ஷாரூக்கிற்கு டிவீட் மூலம் நன்றி தெரிவித்திருந்தார். அதற்கு ஷாரூக்கான், “எனக்குதான் மிகவும் சந்தோஷம். உங்கள் குழுவினர் மிகவும் அன்பாகவும், பண்பாகவும் வரவேற்றனர். மீண்டும் வருகிறேன், ஹைதராபாத் உணவை உங்களுடன் பகிர்ந்து உண்ண வேண்டும்,” என்று பதிலளித்துள்ளார்.
டோலிவுட்டில் நேற்று இது பற்றிய பேச்சுத்தான் அதிகமாக இருந்துள்ளது.