தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சமீபகாலமாக சினிமாவில் போதுமான தயாரிப்பாளர்கள் இல்லை. பெரும்பாலான படங்கள் நஷ்டத்தை கொடுத்து வருவதால் நீண்டகாலமாக படங்களை தயாரித்து வந்த நிறுவனங்களே தற்போது படங்கள் தயாரிப்பதில்லை. அதனால்தான் தனுஷ், ஆர்யா, விஷால், விதார்த், ஏ.ஆர்.முருகதாஸ், வெற்றிமாறன், கெளதம்மேனன் என பலரும் தயாரிப்பாளராகி விட்டனர். இந்த வரிசையில், சங்குதேவன் படத்திலேயே பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரிப்பாளரானார் விஜயசேதுபதி. ஆனால் அந்த படம் கிடப்பில் போடப்பட்டது.
இருப்பினும், ஆரஞ்சு மிட்டாய் படத்தை தானே தயாரித்து நடித்தார் விஜயசேதுபதி. அது மட்டுமின்றி வசனம், பாடல்கள், பின்னணி என பல திறமைகளை காட்டியிருந்தார் அவர். அதோடு வயதான முதியவர் கெட்டப்பில் நடித்திருந்தார். அதனால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் வெற்றி பெறவில்லை. அந்த வகையில், அந்த படத்தை தயாரித்த வகையில் விஜயசேதுபதிக்கு 2 கோடிக்கு மேல் நஷ்டமாகிவிட்டதாக சொல்கிறார்கள்.
இந்த நிலையில், அடுத்தடுத்து அவர் படம் தயாரிப்பார் என்ற நம்பிக்கையில் கதைகளுடன் சென்ற சில தயாரிப்பாளர்களிடம் கதையை ஓகே சொன்ன விஜயசேதுபதி, அவர்கள் தயாரிப்பாளர் இல்லை என்றதும், தயாரிப்பாளர் பிடித்து விட்டு வாருங்கள் என்று அனுப்பி விட்டாராம். மேலும், தற்போதைய நிலவரப்படி பண்ணையாரும் பத்மினியும், வன்மம், புறம்போக்கு, ஆரஞ்சு மிட்டாய் என தொடர் தோல்வி படங்களை கொடுத்து வந்துள்ள விஜயசேதுபதி, கதைகள் விசயத்தில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார். அந்த வகையில், காக்கா முட்டை மணிகண்டன் இயக்கும் படத்தின் மீது பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறாராம் விஜயசேதுபதி.