'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் சினிமாவில் காமெடியனாக இருந்த கவுண்டமணி, வடிவேலு, சந்தானம் என பலரும் ஹீரோக்களாகி விட்டதால் கோலிவுட்டில் காமெடியன் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. காமெடிக்கே சம்பந்தமில்லாத பல நடிகர்கள் காமெடியன் என்ற பெயரில் நடித்துக்கொண்டிருந்தாலும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பு பெற்றவராக இருப்பவர் சூரி மட்டுமே. அந்த வகையில், தற்போது அவர் கைவசம் பல படங்கள் உள்ளன. அதனால் ரொம்ப பிசியாகி விட்டார் சூரி.
விளைவு, வில்லனாக நடித்து வந்த நான் கடவுள் ராஜேந்திரன் தற்போதுஅவருக்கு அடுத்தபடியான காமெடியனாகி விட்டார். அவரை பிரதானமாக வைத்து பல படங்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது அவரும் பிசி காமெடியன்தான். இந்த நிலையில், தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 59வது படத்தில் ராஜேந்திரன் கமிட்டாகியுள்ளார்.
இந்த படத்தில் வேலாயுதம், ஜில்லா உள்பட விஜய்யுடன் பல படங்களில் நடித்திருக்கும் சூரியைதான் நடிக்க வைக்க திட்டமிட்டார்களாம். ஆனால், அவரால் இவர்கள் கேட்ட தேதியில் கால்சீட் கொடுக்க முடியவில்லையாம். அதனால், சூரிக்கு பதிலாக ராஜேந்திரனை புக் பண்ணியுள்ளனர். ஆக, விஜய் படத்தில் நடித்து விட்டதின் மூலம் தற்போது ராஜேந்திரனும் முன்னணி காமெடியன் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.