ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கங்காரு, வந்தாமல போன்ற படங்களில் நடித்தவர் ஸ்ரீபிரியங்கா. தற்போது சாரல், திருப்பதி லட்டு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் சாரல் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களாக டப்பிங் பணிகள் நடக்கிறது. நேற்று படத்தின் நாயகன் அசார் தனக்கான டப்பிங் கொடுத்து வந்தார். முன்னதாக பட நாயகி ஸ்ரீ பிரியங்கா டப்பிங் பேசி விட்டாராம். அதுவும் ஒரே நாளில் மொத்த டப்பிங்கையும் பேசி கொடுத்து விட்டாராம் அவர்.
இதுபற்றி ஸ்ரீபிரியங்காவை கேட்டபோது, இந்த சாரல் படத்தில் எனக்கு ரொம்ப புதுமையான வேடம். அதை உள்வாங்கி இயல்பாக நடித்திருக்கிறேன். அதனால் டப்பிங் பேச வந்தபோது, அந்த கதாபாத்திரமாக மாறியதால், ஒரே நாளில் எனக்கான அனைத்து காட்சிகளிலும் டப்பிங் பேசி விட்டேன். அதோடு, இதற்கு முன்பு நடித்த வந்தாமல படத்தில் இரண்டு நாட்களில் டப்பிங் பேசி முடித்தேன். காரணம், அந்த படத்தில் சென்னை தமிழில் பேசினேன். எனக்குஅந்த அளவுக்கு சென்னை தமிழ் பேச வராது என்பதால் பயிற்சி எடுத்து பேசினேன். அதனால்தான் இரண்டு நாட்கள் ஆனது என்கிறார்.
மேலும், இந்த சாரல் படத்தில் மைனா படத்தில் ஒரு பேருந்திற்குள் நடந்தது போன்ற காதல் கதையில் நடித்திருக்கிறேன். அந்த வகையில் அந்த படத்தில் அமலாபால் நடித்தது போன்ற அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறேன். அதனால் இந்த சாரல் படத்திற்கு பிறகு மைனாவில் அமலாபாலுக்கு கிடைத்தது போன்று பெயர் எனக்கு கிடைக்கும். அதனால் இப்போது அவர் சினிமாவில் இல்லாததால் அவர் இடத்தை நான்தான் பிடிக்கப்போகிறேன் என்கிறார் ஸ்ரீபிரியங்கா.