அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
சினிமா பாடல் எழுதும் கவிஞர்கள் பல்லவி எழுதுவதற்குத்தான் மிகவும் தலையை பிய்த்துக் கொள்வார்கள். எளிமையாகவும் எழுத வேண்டும் விரைவில் மனதில் பதிகிற மாதிரியும் எழுத வேண்டும். அம்மா இங்கே வாவா, நிலா நிலா ஓடிவா, கொக்கு பறபற குருவி பறபற., பாபா ப்ளாக் ஷீப், அஸ்கு புஸ்கு, கைவீசம்மா கை வீசு, நண்டூருது நரியூருது, குச்சி குச்சி தாம்பாளம், டாம் அண்ட் ஜெரி, டோரா புஜ்ஜி என போன்ற சிறுவர் பாடல்கள், கார்ட்டூன் சித்திரங்கள் தொடர்பான பாடல்கள் சினிமாவில் பாடல்களாக வந்துள்ளன. சில நேரடியாகவும், சில உல்டா செய்தும் எழுதப்பட்டுள்ளன.. இப்போது பிரபலமான உள்ள டெம்பிள் ரன், ஆங்க்ரி பேர்டு கேமையும் விட்டு வைக்கவில்லை.
கரண்ட் ட்ரண்டுக்கு யோசித்து வராத போது சிறுவர்களிடம் கேட்டு பல்லவி எழுதுகிறார்கள். இது பற்றி நா. முத்துக்குமார் பேசும்போது... நான் ஒரு படத்துக்காக பல்லவி எழுதிக் கொண்டு இருந்தேன். என் மகன் ஆதவன் அருகில் வந்தவன், என்னப்பா இப்படி எழுதுறீங்க. ஆங்ரி பேர்டு, டெம்புள்ரன் என்று யூத்துக்கு ஏத்தமாதிரி எழுதுங்க என்றான். அவன் சொன்னதை வைத்து ஆங்ரி பேர்டு, டெம்புள்ரன் இரண்டையுமே பல்லவி யாக்கி விட்டேன். அதன் முழுவரியையும் அவனைக் கேட்டு சரிபார்த்து விட்டு எழுதினேன். ஆங்ரி பேர்டு பாடல் பல்லவியை சாஹசம் படத்துக்கும், டெம்புள்ரன் பல்லவியை வேறொரு படத்துக்கும் எழுதினேன் என்றார்.