டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணத்தின் விளிம்பில் உள்ளவரின் கடைசி ஆசையை இளையராஜா நிறைவேற்றி வைத்துள்ளார். சென்னை ஆம்பத்தூரை சேர்ந்தவர் ஆர்.எஸ்.ரவிச்சந்திரன். வயது 44. திருமணம் ஆகாதவர். இவர் உடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள், இரண்டு சகோதரிகள். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் தொடர் இருமலால் அவதிப்பட்டுள்ளார் ரவிச்சந்திரன். இதையடுத்து அவர் மருத்துவமனையில் சகிச்சை பெற்றுள்ளார். காசநோயாக இருக்குமோ என்று எண்ணி சிகிச்சை மேற்கொண்டுள்ளார். ஆனால் இருமல் குறைந்தபாடில்லை. பின்னர் மேற்கொண்ட தொடர் சிகிச்சையில் அவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நோயை குணப்படுத்த முடியாத அளவுக்கு அவருக்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மருத்துவர்களும் அவரை கைவிரித்துவிட்டனர். தற்போது அவர் மரணத்தின் விளிம்பில் இருக்கிறார்.
இந்நிலையில் ரவிச்சந்திரனிடம் உனது ஆசை என்ன என்று அவரது உறவினர்கள் கேட்டுள்ளனர். அதற்கு ரவிச்சந்திரன், தான், இளையராஜாவை சந்திக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதனையடுத்து இந்த விஷயம் இளையராஜாவிடம் தெரிவிக்கப்பட்டது. இளையராஜாவும், ரவிச்சந்திரனை சந்திக்க சம்மதம் சொல்லியிருக்கிறார்.
இதனையடுத்து இன்று(செப்., 19ம் தேதி) சென்னை பிரசாத் லேப்பில், இளையராஜாவை சந்தித்தார் ரவிச்சந்திரன். இளையராஜாவிடம் கண்ணீர் மல்க சிறிதுநேரம் பேசினார் ரவிச்சந்திரன். அப்போது அவரிடம், நான் கடந்த 20 வருடமாக உங்களது தீவிர ரசிகனாக இருக்கிறேன். உங்களது ஜனனி ஜனனி பாடல் முதல் பல மெலடி பாடல்களை நான் விரும்பி ரசிப்பேன். உங்களை சந்தித்தது பெரும் பாக்கியம் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார். இளையராஜாவும் ரவிச்சந்திரனின் பேச்சை அமைதியாக கேட்டபடி கண்ணீர்மல்க, அவருக்கு விடை கொடுத்தார்.
இளையராஜாவை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரவிச்சந்திரன்... எனக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளது. அதிகமாக புகைப்பிடிப்பேன். அதனால் தான் இப்போது இந்த நோயால் அவதிப்படுகிறேன். சிறியவர்கள், பெரியவர்கள் யாரும் என்னை தவறாக நினைக்க வேண்டாம். புகைப்பிடிப்பது, மது அருந்துவது உள்ளிட்ட தவறான பழக்கங்களை நிறுத்தி விடுங்கள். இல்லையென்றால் பின்னாளில் அது உங்களது உயிரை குடித்துவிடும். அந்த கஷ்டத்தை அனுபவித்தவன் என்ற முறையில் சொல்கிறேன் என்று கண்ணீர் மல்க கூறினார்.