டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று பந்த் நடந்து வரும் நிலையில், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ் திரையுலக பிரமுகர்கள் சென்னையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். பிலிம்சேம்பரில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் டைரக்டர்கள் பாலுமகேந்திரா, பாரதிராஜா, அமீர், ஏ.ஆர்.முருகதாஸ், சரவண சுப்பையா, சேரன், மணிவண்ணன், வெற்றி மாறன், ஹரி, பிரவீன்காந்த், சுசிகணேசன், சசி, சமுத்திரகணி நடிகர்கள் சத்யராஜ், கஞ்சா கருப்பு மற்றும் தாமரை, ரோகினி உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர். டைரக்டர் சீமான் உண்ணாவிரதத்தில் சிறிது நேரம் பங்கேற்று விட்டு சென்று விட்டார். மேலும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர். பொதுமக்களும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டுள்ளனர். காலை 9 மணியளவில் தொடங்கிய இந்த உண்ணாவிரதம் மாலை 6 மணி வரை நடக்கிறது. அதன் பிறகு இலங்கை விவகாரம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுத்து அறிவிக்கப்படும் என்று பிலிம்சேம்பர் தகவல்கள் தெரிவிக்கின்றன.