தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
வாய்ப்புகளை ஒப்புக் கொள்வதில் அவசரம் காட்டுவதில்லை, எப்போதும் தேர்ந்தெடுத்து நடிப்பவர் கிஷோர். அவர் இப்போது உற்சாகத்திலும் பூரிப்பிலும் இருக்கிறார். இந்த 2015 அவருக்கு மறக்க முடியாதபடி அமைந்துள்ளதாகப் பூரிக்கிறார்.
ஒரே ஆண்டில் கமல், ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். தூங்கா வனம் படத்தில் கமல், பிரகாஷ்ராஜ், என இரண்டு ராட்சசர்கள் இருந்தாலும் அவர்களே பாராட்டும்படி கிஷோர் நடித்திருக்கிறார். தூங்கா வனம்படத்திற்காக நடித்த இரண்டு மாதங்களும் தனக்கு மறக்க முடியாத அனுபவங்களாக இருந்தன என்கிற கிஷோர், வித்தியாசமான வேடமேற்று நடித்து வரும் யாத்ரீகன் படம் முடிவடையும் நிலையில் உள்ளது.
இதற்காக இந்தியா, நேபாளம் என்று பல இடங்களுக்குப் பயணம் செய்தது நிறைவான அனுபவங்கள் என்கிறவர், தன்னை அடையாளப்படுத்திய வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்த விசாரணை படம் சர்வதேச பட விழாக்களில் பாராட்டு பெறுவதை இன்னொரு மகிழ்ச்சியாகக் கருதுகிறார்.
கடிகார மனிதர்கள், களத்தூர் கிராமம் என மேலும் 2 தமிழ்ப் படங்களிலும் கன்னடப் படங்களிலும் நடித்து வரும் கிஷோர் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது ரஜினியின் கபாலி படப்பிடிப்பைத்தான். அந்தப் பாத்திரத்துக்கு பலரைப்பின்னுக்குத் தள்ளி கிஷோர் பெற்றுள்ளார். ஒரே ஆண்டில் இப்படி ரஜினி, கமலுடன் நடிக்கும் வாய்ப்பு கிஷோரைத் தவிர யாருக்கும் இவ்வளவு விரைவில் கிடைத்து இருக்கிறதா?