தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தந்தை தியாகராஜன் தயாரிப்பில், பிரஷாந்த் நடித்துள்ள சாஹசம் படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் மாதேஷ் அனுபவங்கள் சிலவற்றைப் பகிர்ந்தார்
"இயக்குநர் ஷங்கரிடம் எப்போதுமே ஒரு படம் தொடங்கும் முன்பு அந்தப் படத்துக்கு யாரை ஹீரோவாகப் போடுவது என்று ஒரு பட்டியல் தயாராகும். பலமுறை அதில் முதலில் பிரஷாந்த்தின் பெயர் இடம் பெறும். ஜீன்ஸ் படம் எடுக்க தீர்மானித்த போதும் இதே மாதிரி ஒரு பட்டியல் தயாரானது.
யாருக்கு ஜோடியாகப் போட்டு ஐஸ்வர்யாராயை தமிழில் அறிமுகம் செய்வது என்று பட்டியல் போட்டு பரிசீலனை செய்தோம் அந்தப்பட்டியலில் விஜய் பெயர் இருந்தது, அஜீத் பெயர் இருந்தது, பிரஷாந்த் பெயரும் இருந்தது. கடைசியில் இந்த மூவரில் வெற்றி பெற்றவர், பிரஷாந்த்தான். காரணம் அவரிடம் எல்லாமும் இருந்தது.
நடிகர்களுக்கு தேவையான எல்லாமும் அவரிடம் இருக்கிறது பிரஷாந்திடம் இருக்கிறது. அழகு இருக்கிறது. அறிவு இருக்கிறது டான்ஸ் ஆடும் திறமை இருக்கிறது, ஸ்டண்ட் செய்யும் திறமை இருக்கிறது, எதுவானாலும் பிச்சி பெடலெடுப்பார். இப்படி அத்தனையும் ஒரு சேரப் பெற்றவர் அவர். கட்டுப்பாடுள்ளவர், படப்பிடிப்பில் உதவி இயக்குநர் போல வேலை செய்வார். அப்பா பேச்சை தட்டாத பிள்ளை. அவர் தன் படங்களுக்கிடையே ஏன் இடைவெளி விடுகிறார் என்று எனக்கு அவர் மீது கோபமே வரும். ஆனால் அவர் பதுங்கி இருந்தது பாய்வதற்குத்தான் என்று இப்போது புரிகிறது. அவர் நடிக்கவுள்ள படவரிசையைப் பார்க்கும் போது புரிகிறது.
இவ்வாறு மாதேஷ் கூறினார்.