'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரபல தயாரிப்பாளரின் மகனாக இருந்தாலும் ஜீவா இன்னும் முன்னணி வரிசையில் இடம் பிடிக்காமலேயே இருக்கிறார். விஜய்யுடன் இணைந்து நடித்த 'நண்பன்' படத்திற்குப் பிறகு ஜீவா தனி நாயகனாக நடித்த “முகமூடி, நீதானே என் பொன்வசந்தம், யான்” ஆகிய படங்கள் தோல்விப் படங்களாகவே அமைந்தன. வினய் சந்தானத்துடன் இணைந்து நடித்த 'என்றென்றும் புன்னகை' சுமாரான வெற்றியைப் பெற்றது.
விக்ரமுடன் இணைந்து நடித்த 'டேவிட்' படமும் வந்த சுவடு தெரியாமல் போய்விட்டது. அந்தப் படங்களின் தோல்வி ஜீவாவை நிறைய யோசிக்க வைத்திருக்க வேண்டும். இப்போது சாதாரண கமர்ஷியல் படங்களில் கவனம் செலுத்தாமல் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களிலும், கதாபாத்திரங்களிலும் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.
ராம்நாத் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள 'திருநாள்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. 'ஈ' படத்திற்குப் பிறகு ஜீவா ஜோடியாக நயன்தாரா இந்தப் படத்தில் நடித்துள்ளார். மிகவும் வித்தியாசமான கிராமத்துக் கதையான இந்தப் படத்தை தீபாவளிக்குத் திரைக்குக் கொண்டு வர முயற்சிக்கிறார்கள்.
அடுத்து ராம்பிரகாஷ் இயக்கத்தில் 'போக்கிரி ராஜா' படத்தில் ஜீவா நடித்து வருகிறார். இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. ஜீவா ஜோடியாக ஹன்சிகா இப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தையடுத்து டீகே இயக்கத்தில் 'கவலை வேண்டாம்' படத்தில் ஜீவா நடிக்க உள்ளார். ஜீவா ஜோடியாக காஜல் அகர்வால் இப்படத்தில் நடிக்க உள்ளார். மூன்று முன்னணி ஹீரோயின்களுடன் ஜோடி சேர்ந்துள்ள அதிர்ஷ்டம் ஜீவாவை அடுத்த ரவுண்டில் முன்னணி வரிசையில் கொண்டு சேர்க்கும் என்று எதிர்பார்க்கலாமா...?