ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜயேந்திர பிரசாத்.. இந்தி, தெலுங்கு திரையுலகங்களில் இந்த பெயர் பலவருடங்களாக பிரபலம் என்றாலும், நமது தமிழ் ரசிகர்களுக்கு இவர் அறிமுகமானது பிரமாண்ட வெற்றி பெற்ற 'பாகுபலி'யின் மூலமாகத்தான். இயக்குனர் ராஜமவுலியின் தந்தையான இவர் 'பாகுபலி' படத்திற்கு மட்டுமல்ல, அதேசமயத்தில் இந்தியில் சல்மான்கான் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற 'பஜ்ரங்கி பைஜான்' படத்திற்கும் கதை எழுதியவர். இரண்டு வெற்றிகளை ருசித்த இவர், தற்போது அடுத்த படத்திற்கு தீவிரமாக ஸ்கிரிப்ட் வேலைகளில் ஈடுபட்டுள்ளாராம்.
இந்தமுறை அவர் எழுதும் கதைக்கு கதாநாயகனாக துல்கர் சல்மான் தான் பொருத்தமாக இருப்பார் என்றும் அதற்கேற்றார்போல அவர் கதையமைப்பை வடிவமைத்து வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்ல, இந்தப்படத்தில் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை துல்கருக்கு ஜோடியாக கதாநாயகியாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளாராம் விஜயேந்திர பிரசாத். ஏற்கனவே ராம்சரண், அகில் ஆகியோருடன் நடிக்க வந்த வாய்ப்பை எல்லாம் மறுத்துவிட்டு, தனது மகளை ஷாருக்கான் மகன் இம்ரானுடன் இணைத்து அறிமுகம் செய்ய தக்க தருணம் பார்த்துக்கொண்டு இருக்கும் ஸ்ரீதேவியிடம் பேசி அவரது மனதையும் மாற்றியுள்ளாராம் இந்த 'பாகுபலி' கதாசிரியர். ஆனால் இந்தக்கதை படமாகும் தருணத்தில் துல்கரை மாற்றச்சொல்லி விஜயேந்திர பிரசாத் வற்புறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்றும் சொல்லப்படுகிறது.