ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ் சினிமாவையும், தெலுங்கு சினிமாவையும் பிரித்துப் பார்க்கவே முடியாது. இங்குள்ளவர்கள் அங்கும், அங்குள்ளவர்கள் இங்குமாக சென்னையில் அந்தக் காலத்தில் திரைப்படத் தொழில் ஆரம்பமான காலத்திலிருந்தே இரண்டரக் கலந்திருக்கிறார்கள். தமிழ் ரசிகர்களின் ரசனைக்கும், தெலுங்கு ரசிகர்களின் ரசனைக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருந்ததில்லை. கமர்ஷியல் படங்களை ரசிக்கும் விதத்தில் இரு மொழி ரசிகர்களும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள்.
குறிப்பாக தமிழில் ரஜினி ரசிர்கள் எப்படியோ, தெலுங்கில் பாலகிருஷ்ணா ரசிகர்களும் அப்படித்தான். இருவரது கமர்ஷியல் படங்களிலும் நம்ப முடியாத பல சாகசங்கள் இருந்தாலும் இருவரது ரசிகர்களும் அதை ஆர்பாட்டத்துடனே ரசிப்பார்கள். இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அவர்களது அடுத்த படங்களின் முதல் பார்வையை வெளியிட்டு அதில் ஆச்சரிய ஒற்றுமைய ஏற்படுத்தியிருக்கிறார்கள் அவர்களது தயாரிப்பாளர்கள்.
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'கபாலி' படத்தின் முதல் பார்வை அதிகாரப்பூர்வமாக இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதே சமயம் ஸ்ரீவாஸ் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் 'டிக்டேட்டர்' படத்தின் முதல் பார்வையும் இன்றுதான் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு முதல் பார்வைகளுக்கும் குறைந்தபட்சம் ஆறு வித்தியாசங்களையாவது கண்டு பிடித்துவிடலாம். ஆனால், இரண்டிற்கும் பொதுவான விஷயமாக ஒரு பெரிய சோபாவில் இருவருமே கம்பீரமாக உட்கார்ந்திருக்கும் முதல் பார்வையை இருவருமே வெளியிட்டிருப்பது பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினிகாந்த் படங்களில் சிகரெட் பிடிப்பதை எப்போதே நிறுத்திவிட்டார். ஆனால், பாலகிருஷ்ணா 'சிகார்' பிடிக்கும் புகைப்படம்தான் 'டிக்டேட்டர்' முதல் பார்வையில் இடம் பெற்றுள்ளது. 'கபாலி, டிக்டேட்டர்' இரண்டு படங்களுமே 2016 பொங்கலுக்கு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுவது அடுத்த ஒற்றுமை. எப்படியோ 'கபாலி' கதையும் 'டிக்டேட்டர்' கதையும் ஒன்றாக இல்லாமல் இருக்கட்டும்...