ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் |
ஒரு இயக்குனர் 33 வருடங்களாக கொஞ்சமும் குறையாத மாஸுடன் வலம் வருவது சாதாரண விஷயம் இல்லை. ஆனால் மலையாளத்தில் மட்டும் அப்படி சில இயக்குனர்களுக்கு இந்த பெருமை சாத்தியம் ஆகியிருக்கிறது. அதில் ஒருவர்தான் சத்யன் அந்திக்காடு. மலையாள சினிமாவை பொறுத்தவரை, உணர்வுப்பூர்வமான படங்களை இயக்குவதில் நம்பர் ஒன் யார் என கேட்டால் அனைவரின் விரல்களும் ஒருமித்து சுட்டிக்காட்டுவது இயக்குனர் சத்யன் அந்திக்காடு பக்கமாகத்தான் இருக்கும்.. அன்றும் இன்றும் மலையாளத்தில் மட்டுமல்ல தமிழிலும் பிரபலமாக வலம் வந்த பல நடிகைகள் இவரது கண்டுபிடிப்புதான்.
வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே இயக்குவது என்கிற பாலிஸி கொண்ட சத்யன் அந்திக்காடு, இந்த வருடம் மோகன்லால், மஞ்சு வாரியாரை வைத்து இயக்கி வெளியிட்ட 'என்னும் எப்பொழுதும்' படம் ஹிட்.. இதைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தின் கதையை மட்டுமல்ல, படத்தின் ஹீரோ பஹத் பாசில் என்பதையும் தீர்மானித்துவிட்டார்.. கடந்த 2௦13ல் அடித்த 'த்ரிஷ்யம்' புயலில் இருந்து தப்பித்த ஒரே மலையாள படம் என்கிற பெருமையை கொண்ட 'ஒரு இந்தியன் பிரணயகதா' என்கிற படத்தை தொடர்ந்து இவர்கள் இருவரும் மீண்டும் இரண்டாவது முறையாக இந்தப்படத்தில் இணைகிறார்கள்.. அதுமட்டுமல்ல, இது சத்யன் அந்திகாடு இயக்கும் 55வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.