மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
டார்லிங் படத்தை அடுத்து ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா. இந்த படத்தில் அவருடன் கயல் ஆனந்தி, மனீஷாயாதவ் உள்பட பலர் நடித்துள்ளனர். முதல் படத்திற்கு சவால்விடக்கூடிய வகையில் இந்த படத்தில் பாடல் மற்றும் சண்டை காட்சிகளில் அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.
மேலும், இந்த படம் செப்டம்பர் 17-ந்தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாவதாக கூறப்பட்டு வந்த நிலையில், தியேட்டர்களிலும் டிக்கெட் ரிசர்வேசன் செய்யப்பட்டது. ஆனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் சி.ஜெ.ஜெயக்குமார் என்பவர் ஒரு தயாரிப்பு நிறுவனத்திடம் ஏற்கனவே கடனாக பெற்ற 75 லட்சத்தை ஜூன் மாதமே கொடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததாம். அப்படி இல்லையேல் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தை வெளியிட முடியாது என்றும் கூறப்பட்டிருந்ததாம்.
ஆனால், அந்த பணம் திருப்பிக்கொடுக்கப்படாத நிலையில், படத்தை வெளியிடுவதற்கான வேலைகள் நடந்து வந்தன. இந்தநிலையில், சி.ஜெ.ஜெயக்குமார் நீதிமன்றத்தை அவமதித்து விட்டதாக அவர் மீது மீண்டும் வழக்கு தொடரப்பட்டுள்ளதாம். அதனடிப்படையில் இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளர்களாம். அதனால் இன்று நீதிமன்றத்தில் வரும் தீர்ப்பை பொறுத்தே த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படம் 17-ந்தேதி தியேட்டருக்கு வருமா? இல்லையா? என்பது தெரியவரும் என்கிறார்கள்.