பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தொட்டால் பூமலரும், நினைத்தாலே இனிக்கும், ஆட்ட நாயகன் என பல படங்களில் நடித்தவர் ஷக்தி. டைரக்டர் பி.வாசுவின் மகனான இவர் தற்போது புதுமுக இயக்குனர் ரவி இயக்கத்தில் நடித்துள்ள படம் தற்காப்பு. நேற்று சென்னையில் ஆடியோ விழா நடந்த இந்த படத்தில் சமுத்திரகனியும், ஷக்தியும் எதிரும் புதிருமான வேடத்தில் நடித்துள்ளனர். முதன்முறையாக போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார் ஷக்தி.
அந்த அனுபவம் குறித்து அவர் கூறுகையில், தமிழ் சினிமாவில் சிவாஜிகணேசனின் தங்கப்பதக்கம், விஜயகாந்தின் சத்ரியன், சத்யராஜின் வால்டர் வெற்றிவேல் போன்ற படங்களில் அவர்கள் போலீஸ் வேடத்தில் நடித்ததை நான் ரொம்ப ரசித்திருக்கிறேன். அதேபோல், அஜீத், கார்த்தி போன்றவர்கள் போலீசாக நடித்த படங்களையும் ரசித்திருக்கிறேன்.
அப்படி நடித்தவர்கள் யாராக இருந்தாலும் சிவாஜியின் ஸ்டைலை கண்டிப்பாக பின்பற்றியிருப்பார்கள். காரணம், தங்கப்பதக்கம் படத்தில் சிவாஜியின் நடிப்பு யாருக்குமே பிடிக்காமல் இருக்காது. அந்த வகையில் நானும் அந்த படத்தை ரொம்பவே ரசித்தவன். என்றபோதும், இந்த படத்தில் யாருடைய சாயலும் இல்லாத அளவுக்கு ஷக்திக்கென்று ஒரு பாணியை வைத்து நடித்திருக்கிறேன். அதோடு போலீஸ் வேடத்துக்காக சிக்ஸ்பேக் எதுவும் நான் வைக்க முயற்சிக்கவில்லை. டைரக்டர் அதுபற்றி கேட்பதற்கு முன்பே, இது நல்லா சாப்பிட்டு வளர்ந்த உடம்பு, அதனால் சிக்ஸ்பேக் பற்றியெல்லாம் எதுவும் பேசிவிடாதீர்கள் என்று முன்பே நான் கூறி விட்டேன்.
மேலும், இந்த படத்திற்கான க்ளைமாக்ஸ் காட்சியை 21 நாட்கள் படமாக்கினார் டைரக்டர். அத்தனை நாளும் இரவில்தான் படமாக்கப்பட்டது என்பதால், பகலில் தூங்கி இரவில் கண்விழித்து நடித்தோம். இந்த படத்தில் எனது முழு உழைப்பையும் கொடுத்திருக்கிறேன். நான் இந்த படத்திற்காக வியர்வை சிந்தி நடித்தேன் என்றால் படத்தின் டெக்னிஷியன்கள் ரத்தம் சிந்தி உழைத்தனர். பலருக்கு காயம், ஒருவர் 6வது மாடியில் இருந்து விழுந்து உயிர் பிழைத்தார். இப்படி யூனிட்டே இந்த படத்துக்காக ரத்தம் சிந்தியது.
முக்கியமாக, சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் போராடிக்கொண்டிருக்கும் எனக்கு இந்த தற்காப்பு படம் கண்டிப்பாக ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு ஷக்தி பேசினார்.