இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சிரிப்பு நடிகர் அனுமோகனின் மகன் அருண்மோகன் இயக்கிய 'சரபம்' படத்தில் கதாநாயகியாக, அதுவும் இரட்டை வேடங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமானவர் சலோனி. முதல் படத்திலேயே சிறப்பாக நடித்து ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றார் சலோனி. என்ன பிரயோஜனம்? சரபம் அட்டர் ப்ளாப் படமாகிப்போனதால் சலோனிக்கு தமிழில் படங்கள் இல்லாமல் போனது. எனவே ஏமாற்றமடைந்த சலோனி இனி தமிழ்ப்படமே வேண்டாம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்.
இந்நிலையில் அவரே எதிர்பாராத வகையில் ஒரு தமிழ்ப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு சலோனிக்கு கிடைத்திருக்கிறது. பிரபுதேவா தமிழில் தயாரிக்கும் 3 படங்களில் ஒன்றான 'விநோதன்' படத்தில்தான் இன்னொரு நாயகியாக நடிகை சலோனியும் சேர்க்கப்பட்டுள்ளார். ஐசரிவேலனின் பேரனான அறிமுக நாயகன் வருண் நடிக்கும் இப்படத்தில் வேதிகா கதாநாயகியாக நடிக்கிறார். புதுமுக இயக்குனர் விக்டர் ஜெயராஜ் இயக்கும் இப்படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இப்படத்தின் மூலம் தனக்கு மீண்டும் தமிழ்சினிமாவில் புகழ் வெளிச்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும் சந்தோஷத்திலும் இருக்கிறார் சலோனி.