தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இரட்டை எழுத்தாளர்கள் சுபா திரைக்கதை வசனம் பங்களிப்பில் அண்மை வெளியீடாக வந்துள்ள தனி ஒருவன் படம் பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. அடுத்து இவர்களின் கதையே திரைக்கதை வடிவம் பெற்று யட்சன் படமாக வந்து இருக்கிறது. யட்சன் தொடர்கதையாக ஒரு பிரபல வார இதழில் வந்தது. இது இப்போது திரைவடிவமாக வந்துள்ளது. தாங்கள் எழுதிய கதை திரையில் எப்படி வந்திருக்கிறது என்று சுபாவிடம் கேட்ட போது. "எழுத்து ஊடகம் வேறு ;காட்சி ஊடகமான சினிமா ஊடகம் வேறு .இரண்டுக்குமான மொழிகள் இயங்கு தளங்கள் வேறு வேறு.அப்படியே இதிலும் வரும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் யட்சன் எங்களுக்கு திருப்தியாக அமைந்திருக்கிறது. ஏனென்றால் சினிமாவை நாங்கள் புரிந்து கொண்டிருக்கிறோம். அதன் சுதந்திரங்களை நடைமுறைசாத்தியங்களை தெரிந்து கொண்டிருக்கிறோம். என்கிறார்கள்.