இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
சின்னத்திரை சீரியல் நடிகரும், இயக்குனருமான திருமுருகன், திரு பிக்சர்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி நாதஸ்வரம் என்ற தொடரை தயாரித்து, இயக்கி, நடித்தார். 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒளிபரப்பாக தொடங்கிய இந்த தொடர் 2015ம் ஆண்டு மே மாதம் முடிந்தது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஒளிபரப்பானது. இந்த தொடருக்கு பெரும்பாலான நடிகர் நடிகைகளை இண்டர்வியூ நடத்தித்தான் திருமுருகன் தேர்வு செய்தார்.
இந்நிலையில் இன்னுமொரு புதிய தொடருக்கான பணியில் மும்முரமாக இருக்கிறார் திருமுருகன், அடுத்த தொடருக்கான கதையை எழுதி முடித்து விட்டார். சரத் கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார், சஞ்சீவ் ரத்தன் இசை அமைக்கிறார், ஆறுமுகத் தமிழன் வசனம் எழுதுகிறார். நாதஸ்வரம் போன்றே இந்த தொடருக்கு நடிகர் நடிகைகளை தமிழ்நாடு முழுவதும் நேர்காணல் நடத்தி தேர்வு செய்கிறார். இதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளார்.